states

img

ஜெகன் மோகன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட 410 ஊழியர் பணிநீக்கம்

ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாகக் கூறி 410 ஊழியர்களை மாநில பொதுத் துறை நிறுவனமான  ஃபைபர்நெட் நிறு வனம் நிரந்தரமாக பணிநீக்கம் செய் துள்ளது. ஜெகன் ஆட்சி யில் போதிய தகுதி  பெறாத 410 பேர்    ஃபைபர் நெட் நிறுவனத்தில் சட்டவிரோத மாக நியமிக்கப்பட்டனர்.  பணி நியமனத்  திற்குப் பிறகு ஜெகன் மோகன் கட்சியை  சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்கள் வீடுகளில்  பணி செய்து வந்தனர்.அவர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய்  ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் முறைகேடாக நிய மிக்கப்பட்ட 410 பேரையும் தற்போதைய அரசு  நிரந்தரமாக பணிநீக்கம் செய்வதாக  அறிவித்துள்ளது. ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு  நடத்தியது மட்டுமின்றி, இந்நிறுவனம் மூலமாக பிரபல இயக்குநர் ராம்கோபால்  வர்மாவுக்கு ஜெகன் மோகன்  அரசு  சுமார்   ரூ.1.15 கோடி கடன் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கடன் தொகையை 15 நாட்க ளுக்குள் திரும்பச் செலுத்துமாறு இயக்கு நர்  ராம்கோபாலுக்கு நோட்டீஸ் அளிக்கப்  பட்டுள்ளது. கடனை செலுத்தத் தவறி னால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபைபர் நெட் நிறுவ னத்தின் தலைவர் ஜி.வி.ரெட்டி தெரி வித்துள்ளார்.