states

img

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரணதண்டனை

அகமதாபாத், பிப்.18- கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம்  தேதி குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் மருத்துவமனை, அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் எல்ஜி மருத்துவமனை, பேருந்துகள், நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்கள், கார்கள் மற்றும் பிற இடங்களில் 22 குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர் வலையை ஏற்படுத்தியது.  இந்த வழக்கில் 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசா  ரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெள்ளியன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், 49 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப் பட்டனர். 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம்  பிரிவு 302 ஆகியவற்றின் கீழ் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர் களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி  ஏ.ஆர். பட்டேல் உத்தரவிட்டார். பலத்த காயம்  அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், சிறிய அள வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25,000 ரூபாயும் இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆயுதச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில்  ஒருவரான உஸ்மான் அகர்பத்திவாலா என்பவரின் குற்றம் மட்டும்  நிரூபிக்கப்பட்டதற்காக கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.2.88 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.  இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உபா சட்டப்பிரிவுகளின் கீழ் வெடிக்கும் பொருட்கள் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டத்தின்  கீழ் 49 குற்றவாளிகளில் ஒவ்வொருவருக்கும் வழங்கப் பட்டுள்ள தண்டனைகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனக் கூறியுள்ள நீதிபதி  48 குற்றவாளிகளுக்கு தலா ரூ.2.85 லட்சம் அபராதமும் விதித்துள்ளார்.