புதுதில்லி, செப்.24- கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ரூ.340 கோடி செலவிட்டிருப்பதும், இது கடந்த முறை செலவிட்ட தொகையைக் காட்டிலும் 58 சதவிகிதம் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. 2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில் பிப்ர வரி, மார்ச் மாதங்களில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்க ளில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி நடந்து வருகிறது. பஞ்சாப்பில், காங்கிரஸி டமிருந்து ஆம் ஆத்மியிடம் ஆட்சி கைமாறி யது. இங்கு பாஜக-வுக்கு படுதோல்வி கிடைத்தது. இந்நிலையில்
இந்நிலையில், 5 மாநில தேர்தல் செல வினம் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சி கள் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், பாஜக 5 மாநிலத் தேர்தலுக்கு ரூ.344 கோடியே 27 லட்சம் செலவிட்டி ருப்பதும், இது முந்தைய 2017 தேர்தலில் செலவிட்ட ரூ.218 கோடியே 26 லட்சத்தை விட அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. இதேபோல காங்கிரஸ் கட்சியும் இந்த 5 மாநிலங்களில் 2017 தேர்தலைக் காட்டிலும் 80 சதவிகிதம் அதிகம் செலவிட்டி ருந்தாலும், அந்த தொகை பாஜக-வை விட குறைவாகவே உள்ளது. 2017 தேர்தலில் ரூ.108 கோடியே 14 லட்சம் செலவிட்ட காங்கிரஸ், 2022 தேர்தலில் ரூ.194 கோடியே 80 லட்சத்தை செலவிட்டுள் ளதாக கூறியுள்ளது. இந்த 5 மாநிலங்களில் அதிகபட்சமாக உ.பி.யில் ரூ.221 கோடியே 32 லட்சத்தை பாஜக செலவிட்டுள்ளது. இதுவே 2017 தேர்தலில் ரூ.175 கோடியே 10 லட்சம் என்ற அளவிலேயே பாஜக செலவிட்டிருந்தது. தற்போது கூடுதலாக 26 சதவிகிதத்தை செலவிட்டுள்ளது. அதேநேரம் பஞ்சாப்பில் கடந்த 2017 தேர்தலில் ரூ.7 கோடியே 43 லட்சத்தை செலவிட்டதாக கணக்கு காட்டியிருந்த பாஜக, 2022 தேர்தலில் ஐந்து மடங்கு அதிக மாக ரூ.36 கோடியே 70 லட்சத்தை செல விட்டதாக தெரிவித்துள்ளது.
இவை தவிர, கோவாவில், 2022-இல் ரூ.19 கோடியே 07 லட்சத்தையும் (2017-இல் ரூ.4.37 கோடி), மணிப்பூரில் ரூ.23 கோடியே 52 லட்சத்தையும் (2017-இல் ரூ.7 கோடியே 86 லட்சம்) உத்தரகண்ட்டில் ரூ.43 கோடியே 67 லட்சத்தையும் (2017-இல் ரூ.23 கோடியே 48 லட்சம்) செலவிட்டுள்ளதாக பாஜக கணக்கு காட்டியுள்ளது. செலவுக் கணக்குகள் ஒருபுறமிருக்க, செலவை விட வரவும் பாஜக-வுக்கு அதிகமாக இருந்துள்ளது. தேர்தல் நடைபெற்ற உத்தரப்பிர தேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களிலும், ஜனவரி 8-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிந்த மார்ச் 12, 2022 வரை 63 நாட்களில், பாஜக-வின் தேசிய அலுவலகம் மற்றும் உ.பி., உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் ரூ.914 கோடி க்கு மேல் மொத்த வரவுகளை பெற்றுள்ளதா கவும் பாஜக தேர்தல் ஆணையத்திடம் தெரி வித்துள்ளது. இதே காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சி யும் ரூ.240 கோடியே 10 லட்சம் வரவு களை பெற்றதாக கூறியுள்ளது.