states

img

ஆறே மாதத்தில் ரூ.33 ஆயிரத்து 476 கோடி வருவாய் இந்திய ரயில்வே சாதனை!

புதுதில்லி, அக்.12-  நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே, கடந்த 6 மாதங்களில் (ஏப்ரல் 1 முதல்  அக்டோபர் 8 வரையிலான காலத்தில்) மட்டும் ரூ. 33 ஆயிரத்து 476 கோடி வரு வாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத் தில் ரூ. 17 ஆயிரத்து 394 கோடி என்ற  அளவிலேயே, இந்திய ரயில்வே வரு வாய் ஈட்டியிருந்த நிலையில், இந்த  ஆண்டு அது 92 சதவிகிதம் அதிகரித் துள்ளது. முன்பதிவு செய்து பயணிக்கும் பயணி களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 24 சதவிகிதமும், முன்பதிவு செய்யாத பய ணிகளின் எண்ணிக்கை 197 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 34 கோடியே 56 லட்சம்  பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 42 கோடியே 89 லட்சம் பேர் முன்பதிவு செய்து ரயிலில் பய ணித்துள்ளனர். முன்பதிவு செய்த வகை யில் கடந்த ஆண்டு ரூ. 16 ஆயிரத்து 307 கோடி வருவாய் கிடைத்த நிலையில், அந்த வருவாய் இந்த ஆண்டு ரூ. 26 ஆயி ரத்து 961 கோடியாக- சுமார் 65 சதவிகி தம் அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்யாத பயணிகளைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 90 கோடியே 57 லட்சம் பேர் பயணம் செய்த  நிலையில் இந்த ஆண்டு அந்த எண் ணிக்கை 268 கோடியே 56 லட்சமாக உயர்ந்துள்ளது.  அதேபோல முன்பதிவு அல்லாத பய ணத்தின் மூலமான வருவாயும் கடந்த ஆண்டைவிட 6 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. ஆயிரத்து 086 கோடி வருவாய் கிடைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த வருவாய் ரூ. 6 ஆயி ரத்து 515 கோடியாக உயர்ந்துள்ளது.