states

img

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உறுதி

புதுதில்லி, ஜன.7- மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு, மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், அரசியல் சாசனத் தின்படி இது அனுமதிக்கத்தக்கது தான் என்றும் உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீட்டை நடப்புக் கல்வியாண்டில் மட்டும் கடைப் பிடிக்க அனுமதியளித்துள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்து வப் பட்டப்படிப்பு, மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளா தாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத ஒதுக்கீடும் வழங்க ஒன்றிய அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் இந்த இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சில மருத்துவ மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசா ரணை நீதிபதி சந்திரசூட் தலைமை யிலான அமர்வு முன்பு நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சத வீத இடஒதுக்கீடுக்கான வருமான வரம்பு ரூ.8 லட்சம் என்ற வரையறை யை எதன் அடிப்படையில் உருவாக்கி னீர்கள் என்று உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி யது. இதைத்தொடர்ந்து அதனை மறு பரிசீலனை செய்யத் தயார் என்றும், அதுவரை மருத்துவ படிப்புகளுக் கான கலந்தாய்வு நடைபெறாது என்றும் ஒன்றிய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடந்த நவம்பர் மாத விசாரணையின்போது தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணை புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற் றது. அப்போது ஆஜரான துஷார் மேத்தா, மருத்துவர் மாணவர் சேர்க் கைக்கான கவுன்சிலிங்கை தொடங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  

இதில் திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘மருத் துவக் கல்வியில் மதிப்பெண் அடிப்ப டையில் மட்டும் தகுதியை மதிப்பிடக் கூடாது, மனித விழுமியங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.  இந்நிலையில் ஜனவரி 7 வெள் ளிக்கிழமையன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முதுநிலை மருத்துவ படிப் புக்கான கலந்தாய்வை நடத்த அனு மதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

அதே போல் மருத்து வம் மற்றும் பல் மருத்துவ பட்டப் படிப்பு, மேற்படிப்புகளில் அகில இந் திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியல் சாசனத்தின் படி இது அனுமதிக்கத்தக்கதுதான் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் மட்டும் கடைப் பிடித்து கலந்தாய்வை நடத்தவும் அனுமதி அளித்துள்ளனர். 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வரையறை குறித்து மார்ச் 3 ஆவது வாரத்தில் விசா ரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரி வித்துள்ளனர்.