புதுதில்லி, டிச.17- டிசம்பர் 17 முதல் ஜனவரி 1 வரை உச்ச நீதிமன்ற அமர்வுகள் எதுவும் நடைபெறாது; 2 வார குளிர்கால விடுமுறைக்குப் பின் ஜனவரி 2 முதல் உச்ச நீதிமன்ற அமர்வுகள் நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவாதமாகி உள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலை மையில் 4 மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜி யம் அமைப்புதான், கடந்த 30 ஆண்டுகளாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக கூறி, ஒன்றிய பாஜக அரசானது, உச்ச நீதிமன்றத்துடன் சமீபகாலமாக மோதல் போக்கில் இறங்கியுள்ளது. கொலீஜியம் பரிந்து ரைக்கும் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்ப தில்லை என்ற கட்டத்திற்கு ஒன்றிய அரசு தற்போது சென்றுள்ளது.
சுமார் 20-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் நியமனத்திற்கான கொலீஜி யம் பரிந்துரையை, ஒன்றிய அரசு அண்மை யில் கிடப்பில் போட்டுள்ளது. ஆனால், கொலீஜியம் பரிந்துரையை மறுத லிப்பது நீதிமன்ற அவமதிப்பு என பெங்களூரு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அபய் எஸ் ஓகா மற்றும் விக்ரம் நாத் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ‘‘நீதிபதிகள் நியமனத்தைக் கிடப்பில் போட்டு, ஒன்றிய அரசு எல்லை மீறிச் செல் கிறது. மேலிடத்தில் இருப்பவர்கள் (ஒன்றிய அரசின் ஆட்சியாளர்கள்), தாங்கள் நினைப்ப தைத்தான் செய்வோம் என்று நினைத்தால், நாங்களும் (உச்ச நீதிமன்றம்) நாங்கள் நினைப்பதை செய்வோம். நீதித்துறை தனது பங்குக்கு முடிவு எடுக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளி விடாதீர்கள். சட்டத்தை பின்பற்றுங்கள். சட்டங்கள் இருக்கும்வரை அவற்றை பின் பற்றியே ஆக வேண்டும். கொலீஜியம் என்பது இந்த நாட்டின் சட்டம்’’ என்று நீதிபதிகள் ஒன்றிய அரசை கண்டித்தனர்.
இதனிடையே, கடந்த வியாழனன்று (டிசம் பர் 15) மாநிலங்களவையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘நீதிபதிகளைத் தேர்வு செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது. 1993-இல்தான் இந்த நடைமுறை மாற்றப் பட்டது. எனவே ‘கொலீஜியம்’ நடைமுறையை மாற்றாவிட்டால், காலிப் பணியிடங்களின் எண் ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கே வாய்ப்பி ருக்கிறது” என்று, நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்குப் பதிலளிப்பது போல, மறைமுகமாக உச்ச நீதிமன்றத்தோடு மோதினார். அத்துடன் ‘‘நாட்டில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில் நீதிமன்றங்களுக்கு நீண்ட காலம் விடுமுறை விடுவது நீதியை நாடுபவர்க ளுக்கு வசதியாக இல்லை என்ற உணர்வு மக்க ளிடையே உள்ளது’’ என்று உச்ச நீதிமன்றங்க ளுக்கு விடுமுறைகள் விடப்படுவதையும் விமர்சித்தார். இது, ஒன்றிய பாஜக அரசு, உச்ச நீதி மன்றத்துடன் மோதல் போக்கை கைவிடத் தயாரில்லை. இரண்டில் ஒன்றைப் பார்த்து விடுவது என்ற முடிவில் அது உள்ளது என்ற தெளிவான செய்தியை அளித்தது. ஆனால், நீதிமன்றங்களுக்கு நீண்ட காலம் விடுமுறை விடுவது சரியல்ல என்று சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசிய மறுநாளே (டிசம்பர் 16 அன்று), உச்ச நீதி மன்றத்திற்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்படு வதாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிட்ட அறிவிப்பு, உச்ச நீதிமன்றமும் மோதலுக்குத் தயார் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள் ளது.
குளிர்கால விடுமுறை காரணமாக டிசம்பர் 17 முதல் 2 வார காலத்திற்கு உச்ச நீதிமன்ற அமர்வுகள் இருக்காது; என்றும், விடுமுறை முடிந்து, ஜனவரி 2 முதல் அமர்வுகள் துவங்கும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருப்பது, ஒன்றிய அரசுக்கும் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கும் கொடுக்கப்பட்ட பதிலடி என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக் களை பதிவிட்டு வருகின்றனர். “நீதிபதிகள் விடுமுறையில் சுகமாகத் தங்கி ஓய்வெடுக்கிறார்கள் என்பது தவறான கருத்து. நீதிபதிகள் அவர்கள் எடுத்த முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்து தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றனர். மக்களுக்கு நீதி வழங்குவது என்கிற பொறுப்பு மிகவும் சுமையா னது’’ என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்டோர் முன்பு கூறியிருந்த கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.