புதுதில்லி,பிப்.3- நாடு முழுவதும் அரசு அனுமதி பெற்று 16,427 தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகள் செயல்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. நாடு முழுவதும் தனியார் செக்யூ ரிட்டி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், நிறுவனங்களுக்கு தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்படு கின்றனர். இந்நிலையில் செக்யூரிட்டி தொழி லை முறைப்படுத்தும் வகையில், தனி யார் செக்யூரிட்டி நிறுவனங்கள் மற்றும் செக்யூரிட்டிகளுக்கான தகுதிகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்ச கம் ஏற்கனவே விரிவான விதிகளை வெளியிட்டுள்ளது. பொதுச் சொத்துக் கள் பாதுகாக்கப்படுவதுடன், நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் விஜயகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய உள்துறை சார்பில், இணையமைச்சர் நித்யானந்தராய் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், 2022 ஜனவரி 28 நிலவரப்படி இந்தியாவில் 16,427 தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகள் செயல்படுகின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2821 செக்யூரிட்டி நிறு வனங்களும், இரண்டாவதாக குஜ ராத்தில் 2203 நிறுவனங்களும், மூன்றாவ தாக ராஜஸ்தானில் 1228 நிறு வனங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் 826 செக்யூரிட்டி நிறுவனங்களும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.