சத்தீஸ்கர் மாநிலத்தின் காரியா பந்த் மாவட்டம் மெயின்பூர் வனப்பகுதி ஒடிசா மாநில எல்லையில் உள்ளது. இந்த வனப் பகுதியில் மாவோ யிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உள வுத்துறை தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. திங்களன்று மாலை சிஆர்பிஎப் வீரர்கள் மெயின்பூர் வனப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனவும் சிஆர்பிஎப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் மாவோயிஸ்ட்கள் 14 பேர் உயிரிழந்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த தாக்குதலில் ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்திருந்த மாவோ யிஸ்ட் குழுவின் முக்கியப்புள்ளி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தாக சிஆர்பிஎப் கூறியுள்ளது. 14 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக கூறினாலும் அவர்களின் விபரம், உடல் எங்கே இருக்கிறது என்ற தகவலை சிஆர்பிஎப் வெளியிடவில்லை. இத னால் சத்தீஸ்கரில் சுட்டுக்கொல்லப்பட்ட வர்கள் மாவோயிஸ்ட்கள் அல்ல என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.