உ.பி.,யில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை கூடாரமாக மாறி வரும் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பலியா மாவட்டத்தில் உள்ள பேபானா காவல்நிலையத்திற்கு அருகே ஆசிரியர் ஒருவர், தன்னுடைய வீட்டிற்கு டியூசன் படிக்க வந்த 4ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக பாலி யல் பலாத்காரம் செயதுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரில் டியூசன் ஆசிரியர் மீது போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. எனினும் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஆசிரியரை கைது செய்யப்பட வில்லை என செய்திகள் வெளியாக வில்லை.