states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரம் இனி “கயா ஜி” என்று அழைக்கப்படும் என முதலமைச் சர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்பட வுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக உளவு பார்த்ததாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மே 24ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளமாட்டார் என செய்திகள் வெளியாகி யுள்ளன.

ஆபரேசன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க 7 குழு “

ஆபரேசன் சிந்தூர்” குறித்து உலக நாடுகளுக்கு விளக்க ஒன்றிய அரசு 7 குழுக்களை அமைத்தது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு உலக நாடுக ளுக்கு செல்கிறது. காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், திமுகவின் கனிமொழி, ஜேடியூ எம்.பி., சஞ்சய் குமார் ஜா, தேசிய வாத காங்கிரஸ் (சரத்)  எம்.பி., சுப்ரியா சுலே, ஷிண்டே சிவசேனா கட்சியின் ஸ்ரீகாந்த் ஆகியோரின் தலைமையிலான ஒன்றிய அரசு குழுவை அமைத்தது.  இந்த 7 குழுக்களும் விரைவில் சர்வ தேச சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள தாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித் துள்ளது. இவர்கள் உலக நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகளை எம்.பி.க்கள் குழு சந்தித்து “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கம ளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்.பி.,களைத் தவிர்த்து, ஒன்றிய அரசு சசி தரூரின் பெயரை தேர்வு செய்துள்ளது. இதனால் சசி தரூருக்கும் காங்கிரஸ் தலைமைக் கும் இடையே மோதல் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அட்டாரி - வாகா எல்லை திறப்பு '

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந் தும், இந்தியா - பாகிஸ்தான் இடையே யான போர் பதற்றத்தாலும் அட்டாரி - வாகா எல்லையை ஒன்றிய அரசு மூடி யது. இதனால், பாகிஸ்தான் வழியாக சாலை மார்க்கமாக இந்தியாவில் நடக்கும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அதே போன்று ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டன. குறிப்பாக அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்ட சமயத்தில் இந்தியாவுக்கு உலர் பழங்களை ஏற்றி வந்த ஆப்கா னிஸ்தானைச் சேர்ந்த 160 லாரிகள் இரு  நாடுகளின் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அழுகும் பொருள்கள் என்பதால், ஆப்கானிஸ்தான் லாரிகளை இந்தியாவுக்குள் அனுமதிக்குமாறு ஒன்றிய அரசிடம் வணிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, ஆப்கானிஸ் தான் லாரிகளை இந்தியாவுக்குள் அனு மதிப்பதற்காக, வெள்ளிக்கிழமையில் அட்டாரி - வாகா எல்லை திறக்கப் பட்டது. அட்டாரி - வாகா எல்லை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே 25 கிமீ  தொலைவில் உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் பலி

கோடை வெப்பத்திற்கு இடையே நாட்டின்  பெரும்பாலான மாநிலங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒடிசாவில் வடமேற்கு உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 20 மணி நேரமாக இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை புரட்டியெ டுத்தது. குறிப்பாக கோராபுட் மாவட்ட த்திலுள்ள பரிடிகுடா மற்றும் செமிலிகுடா கிராமங்களில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். அதே போன்று ஜாஜ்பூர், கஜபதி, கஞ்சம் உள்ளிட்ட மாவட்டங்க ளிலும் மின்னல் தாக்கியதில் 6 பேர் வரை உயிரிழந்தனர். இதன்மூலம் கடந்த 24 மணிநேரத்தில் ஒடிசா முழுவதும் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். 5 பேர் கவலைக்கிடம் கோராபுட் மாவட்டத்திலுள்ள பரிடிகுடாவில் மின்னல் தாக்குதலில் சிக்கி 5 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை மை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.