states

img

கர்நாடகத்தை மிரட்டும் டெங்கு 10 நாட்களில் 1,026 பேருக்கு பாதிப்பு

தென் மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு (தென் தமிழ்நாடு) உள்ளிட்ட மாநிலங்க ளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தென் மாநி லங்களில் பருவ மழை கால நோய்கள் வேகமாக பரவி வரு கிறது. குறிப்பாக கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவல் மிகமோசமான அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மாநிலம் முழுவதும் 1,026 பேர் டெங்கு வாலும், 137 பேர் சிக்குன்குனியா காய்ச்ச லாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு  காய்ச்சல் பாதிப்பால்  தார்வாட், ஷிமோ காவில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடகாவில் இப்பொழுது மட்டுமல்ல கடந்த 6 மாதங்களாக டெங்கு பாதிப்பு இருந்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை மாநிலம் முழு வதும் 4,414 பேர் டெங்குவாலும், 778 பேர் சிக்குன்குனியாவிலும் பாதிக்கப் பட்டனர். இதில் தார்வாட் மாவட்டம் மாநி லத்திலேயே டெங்கு அதிகமாக பாதிக்கப் பட்டதாக உள்ளது.அம்மாவட்டத்தின் 81 பகுதிகளில் டெங்கு கடுமையாக பரவி யுள்ளதாகவும், கடந்த 6 மாதத்தில் மட்டும் தார்வாட் மாவட்டத்தில் 437 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள் ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.