புதுதில்லி, மே 27- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற 8ஆவது ‘நிதி ஆயோக்’கூட்டத்தை, 9 மாநில முதல் வர்கள் புறக்கணித்தனர். இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த திட்டக்குழுவை கலைத்துவிட்டு, 2014-இல், ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பை பிரதமர் மோடி கொண்டு வந்தார். நாட்டின் பிர தமர் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார் என்றும், இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. முந்தைய திட்டக்குழுவானது, மாநிலங்க ளின் வரிப் பங்கிற்கு ஏற்ப, அவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கி வந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிகபட்ச நிதி ஒதுக்கீட்டை வழங்கி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாரபட்சத்துடன் நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. ‘நிதி ஆயோக்’கிடமிருந்து நிதியை பெறுவதற்கே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்கள் போராட வேண்டிய நிலை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால், மாநில முதல்வர்களிடம், திட்டக்குழுவுக்கு இருந்த முக்கியத்துவம், நிதி ஆயோக்கிற்கு இல்லா மல் போனது. ‘நிதி ஆயோக்’ கூட்டங்களும், வெறும் சடங்காக மாறிப்போயின. முதல்வர் களின் பங்கேற்பும் குறைந்து போனது.
இந்நிலையிலேயே, சனிக்கிழமையன்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், புது தில்லி பிரகதி மைதான அரங்கில் ‘நிதி ஆயோக்’ கூட்டம் நடைபெற்றது. 2047-க்கான தொலை நோக்குத் திட்டம், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முத லீடு, புகார்களை குறைப்பதற்கான வாய்ப்புகள், பெண் முன்னேற்றம், சுகாதாரம் மற்றும் ஊட் டச்சத்து, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. அதன்படி இந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அருணாசலப் பிர தேச முதல்வர் பேமா கண்டு, மகாராஷ்ட்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேநேரம் 9 மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகியோர் கூட்டத்தைப் புறக்கணித்தனர். உடல் நிலை காரணமாக இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறிவிட்டார். பஞ்சாப் அரசின் கோரிக் கைகளை ஏற்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். தில்லி நிர்வாகம் தொடர்பான, ஒன்றிய அரசின் அவ சரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத் தைப் புறக்கணிப்பதாக தில்லி முதல்வர் கெஜ்ரி வால் கூறி விட்டார். இதுதொடர்பாக விரிவான கடிதத்தையும் பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி வைத்தார். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எந்த காரணத்தையும் தெரி விக்கவில்லை. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ‘இந்த கூட்டத்தால் எந்த பயனும் இல்லை’ என, தான் பங்கேற்காததற்கான காரணத்தை தெளிவு படுத்தினார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள் ளதாலும், முன்னரே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி காரணமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. இதுதொடர்பாக கருத்துக் கூறியுள்ள சிவ சேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) எம்.பி. சஞ்சய் ராவத், “பாஜக ஆளாத முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது, ஒன்றிய அரசு அவர்களை சரியாக நடத்தாததை காட்டுகிறது. ஒன்றிய அரசுக்கு அடிபணியாதவர்களின் கோரிக்கைகளை, ‘நிதி ஆயோக்’ ஏற்க மறுக்கி றது” என்று தெரிவித்துள்ளார்.