1. விவசாயக் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படுகிறது. தோட்டக்கலை துறைக்கு ரூ. 2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2. 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டுக்கு தொடரும். இதற்காக ரூ.1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
3. இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு ரூ. 2.40 ஆயிரம் லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 மடங்கு அதிகமாகும்.
4. பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ரூ. 78 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
5. மீன்வளத்துறையில், பிரதமர் மத்சயா சம்பாதா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
6. பழங்குடியினரின் வளர்ச்சிக்கு ரூ 15,000 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.
7. கர்நாடகாவிற்கு (விரைவில் தேர்தல் அறிக்கப்பட உள்ளது)
8 . வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.5,300 கோடி ஒதுக்கப்படுகிறது.
9. 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள், வாட்டர் ஏரோட்ரோம்கள் மற்றும் மேம்பட்ட தரையிறங்கும் மண்டலங்களுக்கு புத்துயிர் அளிக்கப்படும். ஸ்டீல், துறைமுகங்கள், உரம், நிலக்கரி, உணவு தானியம் ஆகிய துறைகளுக்கான 100 முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்புத் திட்டங்கள் ரூ. 75,000 கோடி முதலீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் ரூ. 15,000 கோடி தனியாரிடம் இருந்து பெறப்பட்டன.
10. வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசு ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்.
வரி உயர்வும் குறைப்பும்...
சிகரெட் மீதான வரி 16 சதவிகிதம் உயர்த் தப்பட்டுள்ளது. கலப்பு ரப்பரின் அடிப் படை இறக்குமதி வரி 10 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்கக் கட்டிகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. கிச்சன் எலக்ட்ரிக் சிம்னி சுங்க வரி 7.5 சதவிகி தத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப் பட்டுள்ளது. டிவி பேனல்களின் ஓபன் செல்களின் பகுதி களுக்கான சுங்க வரி 2.5 சதவிகிதமாக குறைக் கப்பட்டுள்ளது. மொபைல் போன் உற்பத்திக் கான சில உள்ளீடுகளின் இறக்குமதி மீதான சுங்க வரியை குறைக்கவும் அரசு முன்மொழிந் துள்ளது. கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக் கப்படும். ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங் கள் தயாரிக்கப் பயன்படும் விதைகளுக்கான அடிப்படை சுங்க வரியையும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீவனத்தின் மீதான சுங்க வரியையும் அரசு குறைக்க முடிவு செய்துள்ளது.
மாற்றி அமைக்கப்பட்ட வருமான வரி விகிதம்
2020-இல் 6 வருமான அடுக்கு களுடன் கூடிய தனிநபர் வருமான வரி முறையை அறிமுகப் படுத்தியிருந்த மோடி அரசு, 2023-24 முதல் அடுக்குகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைத்து, வரி விலக்கிற்கான உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தியுள்ளது.
1. ரூ. 0 - 3 லட்சம் வரை வருமான வரி இல்லை.
2. ரூ. 3 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ள வர்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக் கப்படும்.
3. ரூ. 6 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ. 9 லட்சம் வரையிலான வருமா னத்திற்கு 10 சதவிகிதம் வரி விதிக் கப்படும்.
4. ரூ. 12 லட்சம் மற்றும் ரூ. 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.
5. ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமா னம் இருந்தால் ரூ. 30 லட்சம் வரி விதிக்கப்படும்.
புதிய வரி நடைமுறை தேர்வு செய்தவர்களுக்கு 7 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் (Tax rebate) அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த டாக்ஸ் ரிபேட் அளவு 5 லட்சமாக உள்ளது. இதுவரை தனிநபர்க்கான உச்ச பட்ச வரி 42 சதவிகிதமாக இருந்த நிலை யில், இந்த உச்சபட்ச வருமான வரி 40 சத விகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. வருமான வரி அளவீட்டைக் குறைக் கும் விதமாக வருமான வரி விதிப்பில் இருக்கும் சர்சார்ஜ் அளவீடு 37 சத விகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. லீவ் என்கேஷ்மெனட் கீழ் 3 லட்சமாக இருந்த வருமான வரி விலக்கு, தற்போது அரசு ஊழியர்களுக்கான அதிகப்படியான சம்பள உயர்வைப் பொறுத்து 3 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
வரிச் சலுகையால் அரசுக்கு ரூ.35 ஆயிரம் வருவாய் இழப்பாம்
ஒன்றிய அரசின் 2023-24 நிதியாண்டிற் கான பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் பிரிவின ருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மாற்றியமைக்கப் பட்ட பிறகு நிகர வரி வருவாயில் சுமார் ரூ. 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான இழப்பை அரசு எதிர்கொள்ள உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரிச் சலுகைகள் மூலம் மொத்தம் 38 ஆயி ரம் கோடி ரூபாய் வரி வருவாயை இழக்கும் வேளையில், இதில் தனிநபர் வருமான வரி யினம் வரும் நேரடி வரி வருவாய் பிரிவில் மட்டும் ரூ. 37 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட உள்ளது. சுமார் 1,000 கோடி ரூபாயை மறைமுக வரிகள் வாயிலாக இழக்க நேரிடும். எனினும், இந்தாண்டுக்கு 3,000 கோடி வருவாய்க் கூடுதலாகத் திரட்டப்பட உள்ள தால், நிகர இழப்பு ரூ. 35 ஆயிரம் கோடி ரூபா யாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
இது பட்ஜெட்டல்ல; மளிகைக் கடைக்காரரின் சிட்டை...
சுப்பிரமணியன் சாமி விமர்சனம்
சுப்பிரமணியன் சாமி விமர்சனம் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன்சாமியும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “இன்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா? இது மளிகை கடைக்காரர் ஒருவரின் பில்லாக உள்ளது. சரியான பட்ஜெட் என்பது நாட்டின் குறிக்கோள்கள் என்ன? என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டால் முதலீட்டின் நிலை என்ன? வருவாய் விகிதம் என்ன? என்ன என்பதை கூற வேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் வளங்களை கையாளும் திட்டம் உள்ளிட்டவற்றை எடுத்து காட்ட வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட் துளிகள்
* நிர்மலா சீதாராமன் தற்போது தாக்கல் செய்த 2023-24ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் மூலம், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பு, ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர்கள், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர் ஐந்து முறை ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
* தற்போதைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். அடுத்தாண்டு ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தில் கட்டப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அத்துடன், பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான தற்போதைய பாஜக அரசு தாக்கல் செய்யும் முழு ஆண்டுக்குமான கடைசி நிதிநிலை அறிக்கையாகவும் இது அமையும். 2024-இல் மக்களவைத் தேர் தல் வரவுள்ளதால், 2024 பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.