states

img

“இந்தியா” கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என வீடு புகுந்து மிரட்டல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில்  உள்ள 2 மக்களவை தொகு திகளுக்கும், காலியாக இருந்த  ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளிலும் இடதுசாரிகள் - காங்கிரஸ் அடங்கிய “இந்தியா” கூட்டணி களமிறங்கியுள்ள நிலை யில், திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிக்கும், ராம்நகர் சட்டமன்ற  தொகுதிக்கும் வெள்ளியன்று (ஏப்.19) நடைபெற்ற முதல்கட்டத் தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

“தோல்வி பயத்தில் உள்ள  பாஜக வாக்காளர்கள், வாக்குச் சாவடி முகவர்கள் மீது தாக்கு தல் நடத்தியும், பல்வேறு மோசடி களை அரங்கேற்றியதால் திரிபுரா வில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்  டும்” என இடதுமுன்னணி தேர்தல்  ஆணையத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

“இந்தியா” கூட்டணி முகவர்கள் மீது தாக்குதல்
தேர்தல் ஆணையத்திற்கு இடதுமுன்னணி அளித்த கடி தத்தில்,”பாஜக அனைத்து மோச டிகளையும் முன்கூட்டியே திட்ட மிட்டு, திரிபுரா மேற்கு மக்களவை தொகுதி மற்றும் ராம்நகர் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத் தேர்  தலையும் கேலிக்கூத்தாக மாற்றி யுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடி வடைந்த காலகட்டத்திலிருந்து 2  தொகுதிகளிலும் போட்டியிடும்  “இந்தியா” கூட்டணி வேட்பாளர் களுக்கு வாக்குச்சாவடி முகவராக  யாராவது பொறுப்பேற்கத் துணிந் தால் மோசமான விளைவுகளை சந்  திக்க நேரிடும் என பாஜகவினர் வீடு  புகுந்து மிரட்டியது மட்டுமல்லா மல், சில இடங்களில் வாக்குப்பதிவு  நடைபெற்ற நாளான வெள்ளி யன்று அதிகாலையிலேயே “இந்  தியா” கூட்டணி வாக்குச்சாவடி முக வர்களின் வீட்டிற்கே சென்று பாஜகவினர் உடல் ரீதியாக தாக்கு தல்கள் நடத்தினர். மிரட்டலுக்கு அஞ்சாமலும், தாக்குதலை பொருட் படுத்தாமலும் வாக்குச்சாவடிக்கு வருகை தந்த “இந்தியா” கூட்டணி முகவர்களை பாஜகவினர் வாக்  குச்சாவடியிலிருந்து வலுக்கட்டா யமாக வெளியேற்றியுள்ளனர்.

குறிப்பாக தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என வாக்  காளர்களை முன்கூட்டியே அடை யாளம் கண்டு அவர்களது வீட்டிற்  குச் சென்று மிரட்டியும், வீடுகளை  விட்டு வெளியே வரவிடாமல் அடைத்தும், உடல் ரீதியான சித்ர வதைகளையும் நிகழ்த்தி பாஜக  குண்டர்கள் அரசியல் சூழ்ச்சியில்  ஈடுபட்டனர். மேலும் வெளிப்பகுதி யில் இருந்து திரட்டப்பட்ட பாஜக  குண்டர்கள் மூலம், வாக்களிக்காத  வாக்காளர்களின் பெயரில் கள்ள  வாக்குகளும் பதிவு செய்துள்ளனர்.

தற்போது நிகழ்த்தப்பட்ட பாஜகவின் பாசிசத் திட்டம் அனைத்  தும் 2019இல் திரிபுரா மேற்கு நாடா ளுமன்றத் தொகுதிக்கு நடந்த தேர்த லில் மோசடி செய்த கறை படிந்த அனுபவத்தை மிஞ்சியுள்ளது. சுதந்திரமான மற்றும் அமைதி யான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல விஷ யங்களை கூறியுள்ளது. ஆனால் திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதி மற்றும் ராம்நகர் சட்ட மன்றத் தொகுதியின் கணிசமான  எண்ணிக்கையிலான வாக்காளர் கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாத சூழலை  எதிர்கொண்டுள்ளனர். வாக்க ளிப்பதற்கும், வாக்களிக்க உதவு வதற்கான வேலையை கையா ளும் விதத்தில் தேர்தல் ஆணையம்  மிகப்பெரிய தோல்வியை சந்தித்  துள்ளது. இத்தகைய செயல்பாடு களால் தேர்தல் ஆணையத்தின் உயரிய பேச்சுக்கள் பலனில்லா மல், பற்கள் இல்லாமல் ஆகிவிட்  டன.

வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகள் முறையாகப் பாது காக்கப்பட்டு, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய வகையில் வரும் மே 7 அன்று திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதிக்கும், ராம்  நகர் சட்டமன்றத் தொகுதிக்கும் மறு வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்” என கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

பாஜகவிற்கு பதிலடி

திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதி மற்றும் ராம்நகர் சட்ட மன்றத் தொகுதியில் “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிப்பதை தவிர்க்க பாஜக குண்டர்கள் வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களை வீடு புகுந்து மிரட்டிச் சென்றனர். ஆனால் பாஜக குண்டர்களின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சா மல் தைரியமாக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். மேலும்  “இந்தியா” கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி முக வர்கள், வாக்குச் சாவடிகளில் தைரியமாக தங்கள் கடமையை செய்ய  இணைந்தனர்.