அகர்தலா பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் வங்கதேச எல்லைப் பகுதியில் உள்ளது கோல் சக்கர். இந்த பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக சாலையின் ஓரம் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப் பட்ட வீடுகளுக்கு நிவாரணம் மற் றும் வீடுகளை இழந்தவர்கள் தங்க மாநில பாஜக அரசு இன்னும் மாற்று ஏற்பாடு செய்யவில்லை. இதனை கண்டித்து கடந்த நவம்பர் 15ஆம் தேதி வீடுகளை இழந்த மக்கள் கோல் சக்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலின் பொழுது பாஜகவினரால் அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,”கோல் சக்கர் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட புல்டோசர் நடவடிக்கை மனிதாபி மானமற்ற செயல்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், திரிபுரா எதிர்க் கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். வீடுகள் இடிக்கப்பட்ட பகுதி யை பார்வையிட்டும், வீடுகளை இழந்து தவிக்கும் கோல் சக்கர் மக்களை சந்தித்த பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஜிதேந்திர சவுத்ரி மேலும் கூறுகையில், “நெடுஞ்சாலைக் காக வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பது போன்ற கடுமையான நட வடிக்கையை எடுப்பதற்கு முன், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறை யான மறுவாழ்வு ஏற்பாடுகளை திரி புரா அரசு செய்திருக்கவேண்டும். ஆனால் மாநில அரசு வெளிப் படுத்திய தொலைநோக்கு பார்வை யின்மை காரணமாக கணிசமான குடும்பங்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குடும்பத் தின் வீடு இடிக்கப்படும் போது எந்த அரசாங்கமும் அதன் இழப்பை ஈடுசெய்ய முடியாது. ஆனால் குறைந்தபட்சம் எந்த கவலையும் இல்லாமல் தூங்கக்கூடிய இடமா வது அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்த மனிதாபிமான மற்ற செயல் பல மக்களை திறந்த வெளியில் இரவுகளைக் கழிக்க நிர்ப்பந்தித்துள்ளது. கோல் சக்கரில் இருந்து வெளி யேற்றப்பட்ட குடும்பங்கள் கடந்த 50 முதல் 60 ஆண்டுகளாக இங்கு வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளில், நிலத்தை காலி செய்ய போதுமான கால அவ காசத்தை மாநில நிர்வாகம் அவர் களுக்கு கொடுத்திருக்க வேண் டும். அதற்கு பதிலாக தங்களுக்கு மட்டும் தெரிந்த காரணங்களுக்காக மாநில நிர்வாகம் அவசர அவசர மாக வெளியேற்றும் நடவடிக்கை யை மேற்கொண்டது. திரிபுரா மாநில அரசு நிர்வாகம் நாட்டின் சட்டத்தை புறக்கணித்துள் ளது. புல்டோசர் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் குறிப் பிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள் ளது. ஆனால் திரிபுரா பாஜக அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொருட்படுத்தவில்லை. பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு முறையான மறுவாழ்வு ஏற்பாடுகளை செய்யு மாறு முதல்வர் மாணிக் சாஹா மற்றும் மேயர் தீபக் மஜும்தாரை கேட்டுக் கொள்கிறேன்” என அவர் கூறினார்.
திரிபுராவில் வகுப்புவாத வன்முறைகளை தடுத்து நிறுத்துக!
சிபிஎம் மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, மூத்த தலைவர் மாணிக் தே மற்றும் கடம்தலா எம்எல்ஏ இஸ்லாமுதீன் ஆகியோர் அடங்கிய தூதுக்குழு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவை சந்தித்து, மாநிலத்தில் நிகழும் வகுப்புவாத வன்முறைகளை கட்டுப்படுத்தக் கோரி 7 அம்சக்கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தனர். முதல்வருடனான சந்திப்பின் பொழுது கந்தத்விசா, கடம்தலா, கைதோர்பாரி மற்றும் பேகுசெர்ரா ஆகிய இடங்களில் நடந்த வகுப்பு வாத வன்முறை சம்பவங்களின் தொடர்ச்சியாக மாநிலத்தில் அதி கரித்து வரும் மதரீதியான அணிதிரட்டல் குறித்த அவசர பிரச்சனை தொடர்பாக தூதுக்குழு விவாதித்தது. மேலும் மாநிலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்குமாறும், மாநிலத்தில் நிலவும் வேலையின்மை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வன்முறையால் பாதிக்கப்பட்ட கடம்தலா பகுதியை விரைவில் ஆய்வு செய்வதாக முதல்வர் மாணிக் சாஹா சிபிஎம் தூதுக்குழுவிடம் உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிபிஎம் தூதுக்குழு முதல்வரிடம் சமர்ப்பித்த ஏழு அம்ச கோரிக்கைகள்: 1. அக்டோபர் 6 அன்று கடம்தலாவில் சிஆர்பிஎப் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு போதுமான நிதி இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும். 2. பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் காயமடைந்த வர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்க வேண்டும். 3. வகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மறுவாழ்வின் ஒரு பகுதியாக இழப்பீடு வழங்க வேண்டும். 4. தீ வைப்பு தாக்குதல்களில் சொத்துக்களை இழந்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். 5. கும்பல் தாக்குதல்களில் அனைத்தையும் இழந்த சிறு வியாபாரி கள், வணிகர்களுக்கு எளிய மற்றும் குறைந்த வட்டி கடன் வழங்குவது குறித்து வங்கிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 6. மதரீதியான தாக்குதல்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை தொடங்க வேண்டும். 7. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.