புதுதில்லி, டிச.2- திரிபுரா மாநிலத்தில் நகராட்சிகளுக் காக நடைபெற்ற தேர்தலில் உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிவிட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து விவாதித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறார். திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஆளும் பாஜக மாநில அரசின் உதவியுடன் குண்டர் கும்பல்கள் அனைத்துத் தொகுதி களுக்கும் சென்று இடது முன்னணி வேட்பாளர்கள், அவர்களின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளனர். தேர்தல் நாளன்று எவரும் தங்கள் வீடுகளி லிருந்து வெளியே வரக்கூடாது என்று கூறி யதோடு, பலரை அவர்களின் வீடுகளி லிருந்து விரட்டி அடித்திருக்கின்றனர். மிகப் பெரிய அளவில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இடது முன்ன ணிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் என்று கருதிய எவரையும் வாக்களிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இடது முன்னணி தேர்தல் முகவர்களையும் கடுமையாகத் தாக்கி விரட்டியடித்திருக் கின்றனர். ஏழு நகராட்சிகளில் இடது முன்னணி க்காகப் போட்டியிட வந்த வேட்பாளர் களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததன் காரணமாக அந்நக ராட்சிகளில் பாஜக சார்பான வேட்பாளர் கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்காக வந்திருந்த காவல்துறையினரும், துணை பாது காப்புப் படையினரும் நடைபெற்ற அட்டூழியங்கள் அனைத்திற்கும் வெறும் பார்வையாளர்களாக இருந்துள்ளனர். இவ்வாறு ஜனநாயகநெறிமுறைகள் மீறப்பட்டிருப்பது குறித்து மக்களவை யின் இதர பணிகளை ஒத்திவைத்துவிட்டு, விவாதம் நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, பி.ஆர்.நடராஜன் ஒத்தி வைப்புத் தீர்மானத்திற்கான அறிவிப்பை அளித்திருக்கிறார்.