states

இந்தி மொழித்திணிப்புக்கு எதிர்ப்பு அக்.27 இல் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இளைஞர்கள் - மாணவர்கள் போராட்டம்

சென்னை,அக்.21- இந்தி மொழித்திணிப்புக்கு எதிர்ப்பு தெரி வித்து அக்டோபர் 27 அன்று ஒன்றிய அரசு அலு வலகங்கள் முன்பு  இளைஞர்கள் - மாணவர்கள் போராட்டத்திற்கு வாலிபர்-மாணவர் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை யிலான  அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, தனது 11வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்திருக் கிறது. அதில், இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களிலும் தொழில் நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களிலும் இந்தி யிலோ அல்லது பிராந்திய மொழியிலோதான் கற்பிக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தை விரும்பினால் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பாடத் திட்டங்கள் ஒன்று இந்தியிலோ அல்லது பிராந்திய மொழிகளிலோதான் இருக்க வேண்டுமென்ற தேசியக் கல்விக் கொள்கை யின் அடிப்படையில் இந்த அறிக்கை உரு வாக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் அலுவலகங்கள், அமைச்ச கங்கள், துறைகளில் இந்தியிலோ அல்லது உள்ளூர் மொழியிலோதான் பேச வேண்டும். ஒன்றிய அரசு ஒருங்கிணைக்கும் எல்லா நிகழ்வு களிலும் இந்தியிலோ அல்லது உள்ளூர் மொழி யிலோதான் அழைப்பிதழ்கள், பேச்சுகள்,  நிகழ்ச்சித் தொகுப்பு ஆகியவை இருக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டிருக் கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழி கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள்.  இந்தி படித்தால் மட்டுமே இனி வேலை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாய மாக்குவது, அதிகாரிகளோ அலுவலர்களோ இந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.  இது இந்தியாவில் உள்ள மற்ற மொழி பேசும் மக்களுக்கு எதிரான நடவடிக்கை யாகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத் திற்கும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கை யை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக உறுதி மிக்க போராட்டத்தை நடத்த வேண்டும் என்று  இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அறைகூவல் விடுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.