மயிலாடுதுறை, டிச. 9 - மக்கள் நல்லிணக்க சமத்துவப் பொங்கல் கொண்டாட வாலிபர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு கூட்டம், மயிலாடுதுறை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியை அரசே நடத்துக!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரணம் குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. வழக்கு விசா ரணை நடைபெற்று வரும் வேளையில் பிரச்சனைக்குரிய அந்த பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப் பட்ட நபர்கள் ஜாமீனில் வெளிவந்து தற்போது மீண்டும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். இது வழக்கு விசார ணையின் நேர்மையை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.. ஆகவே தமிழக அரசு தலையிட்டு கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை வழக்கு முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப் படும் நாள் வரை அரசு நடத்திட வேண்டும். ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் அரசு தீர்மானிக்கிற குழுவால் பள்ளி நடத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
பெரம்பலூர் மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குக!
பெரம்பலூரில் ராஜேஸ்வரி என்ற 17 வயது மாணவி பாலியல் வன்புண ர்வுக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். காவல்துறை உடனடியாக நட வடிக்கை எடுத்திருந்தால் காப்பாற்றி யிருக்க முடியும். மாணவி மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க தமிழக அரசு தலை யிட வேண்டும். ராஜேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இழப்பை ஈடு செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாய் என்பது போதுமானதாக இருக்காது. இதனை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.. குடும்ப தலை வரின் வங்கி கணக்குக்கு இந்த பரிசு தொகை அனுப்பப்படும் என்கிற தமி ழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குடும்ப தலைவி கள் கைகளில் நேரடியாக பொங்கல் பரிசுப் பணம் வழங்கப்பட வேண்டும்.
மக்கள் நல்லிணக்க சமத்துவ பொங்கல்
ஆர்.எஸ்.எஸ். பாஜக மதவெறி சக்திகள் மக்களை மதத்தின் பெய ரால் பிளவுபடுத்தி துண்டாடுகிற அபா யத்தில் நாடு உள்ளது. அவதூறு கருத்து க்கள், மதவெறி நச்சுக் கருத்துக்களை பரப்பி வருகின்றது. இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவு மக்கள் ஒற்றுமையையும் நல்லி ணக்கத்தையும் உயர்த்தி மக்களை ஒன்றுபடுத்துகின்ற பணியை முன்னெடுக்க வேண்டியுள்ளது.. இஸ்லாம் - கிறிஸ்தவ - இந்து மற்றும் பிற மத்ததினரும் பங்கேற்கும் வகை யில் பொங்கல் விழாக்களை தமிழர் திரு நாளாக, உழவர் திருநாளாக சமத்துவ பொங்கல் விழாக்களை நடத்திட வேண்டும் என்று வாலிபர் சங்கத்தின் அனைத்து கிளைகளுக்கும் சங்கத்தின் மாநிலக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.