states

இளைஞர்களின் வேலை பாதுகாப்பின்மை - கே.பாலகிருஷ்ணன் கவலை

ஈரோடு, அக். 22- இந்தியாவில் வேலையை அடிப்படை உரிமையாக்கி, வேலை பாதுகாப்பை வழங்கும் நிலைமை இல்லாததால், இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தில் வாழ்ந்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேதனை தெரி வித்தார். ஈரோடு சிபிஎம் புதுப்பிக்கப்பட்ட மாவட்டக்குழு அலுவலகத்தில் ஏ.எம்.காதர் நினைவு கூட்டரங்கை திறந்து வைத்து பேசிய அவர், செங்கொடி இயக்கம் உழைக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்க மாக திகழ்வதாகவும், மக்களின் உரிமை கள் அனைத்தும் போராட்டங்களின் விளைவாகவே கிடைத்ததாகவும் குறிப்பிட்டார். மோடி ஆட்சியில் சம்பளம் குறைந்து, விலைவாசி உயர்ந்து வருவதாகவும், அம்பானி-அதானிக்கான வளர்ச்சியே நடைபெறுவதாகவும் விமர்சித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் இந்தியா பட்டினி பட்டியலில் இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார். சாம்சங் தொழிலாளர்களின் 38 நாள் போராட்டம் குறித்து பேசிய அவர், தொழிற்சங்க உரிமைக்காக நடந்த இந்த போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிலாளர் உரிமை மறுப்பை தமிழக அரசு கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மதவாத அரசியலை கண்டித்த அவர், கிராமங்களில் மத முரண்பாடுகளை வளர்க்கும் முயற்சிகள் நடைபெறுவ தாகவும், இந்தியா கூட்டணி மேலும் வலுப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். கார்ப்பரேட் மயமாக்கல் கொள்கையால் தொழிற்சங்க உரிமை கள் பறிபோனதாகவும், நிரந்தர வேலை வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும் குறிப்பிட்டார். வேலை உத்தரவாதம் மற்றும் உருப்படியான சம்பளத்திற்காக இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். சாதிய ஒடுக்குமுறைகளையும் தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற முழக்கத்தை எதிர்த்து நாடு தழுவிய இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.