states

விக்கிரவாண்டியில் இளம் பெண் படுகொலை: வாலிபர் கைது

விழுப்புரம், மார்ச் 17- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டத்திற்குட்பட்டது ராதாபுரம். இந்த கிராமத்தை சேர்ந்த வர் தரணி (19). இவர் விழுப்புரத்தி லுள்ள செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ராதாபுரம் அருகே உள்ள மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த  கணேசன் என்ற வாலிபர் கடந்த 3 ஆண்டுகளாக இவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள் ளையை தான் திருமணம் செய்து  கொள்ளப் போவதாக தரணி கூறியுள்ளார். இதனால் இருவருக் கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள் ளது. ஆத்திரமடைந்த கணேசன் வெள்ளிக்கிழமை (மார்ச் 17)   அதிகாலையில், ராதாபுரத்தில் தனது வீட்டிற்கு வெளியில் இருந்த கழிப் பறைக்கு சென்ற வீடு திரும்பிய தரணியை வழிமறித்து, தகராறு செய்துள்ளார். பிறகு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தரணி யின் கழுத்தில் குத்திவிட்டு அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த  வெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இந்த  சம்பவம் ராதாபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த  விக்கிரவாண்டி காவல் துறையினர்  உடனடியாக சம்பவ இடத்திற்கு  வந்து கல்லூரி மாணவி தரணி யின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, காவல்துறையினர்  நடத்திய விசாரணையில், கொலை யாளி கணேசன் என்பது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.