states

தீக்கதிர் விரைவு செய்திகள்

உழைக்கும் பெண்கள் மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு

நாகர்கோவில், ஆக.17- இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) உழைக்கும் பெண்கள் அகில இந்திய மாநாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர்  6ல் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக் குழு கூட்டம் நாகர்கோவில் சிஐடியு அலுவலகத்தில்  நடைபெற்றது.  வரவேற்புக் குழு கௌ ரவ தலைவராக கே.செல் லப்பன், தலைவராக இந்திரா, செயலாளராக கே. பி.பெருமாள், பொருளாள ராக வேலன் , புரவலர்க ளாக எ.வி.பெல்லார்மின், ஆர்.செல்லசுவாமி, லீமா றோஸ், ஜெலஸ்டின் மற்றும் 28 துணைத் தலைவர்கள் 29 துணைச் செயலாளர்கள் கொண்ட வரவேற்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. 

ஆளில்லா விமான சோதனை மையம்

சென்னை, ஆக.17- ஆளில்லா விமான சோதனை மையம் தமிழ் நாட்டில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு உட்கட்ட மைப்பு சோதனை திட்டத்தின் கீழ் முதல்  ட்ரோன் சோதனை மையம், திருபெரும் புதூர் அருகே வல்லம் வடகால் சிப்காட்  தொழில் பூங்காவில் அமைக்கப்பட் டுள்ளது. 4 நிறுவனங்கள் டிட்கோவுடன் இணைந்து ரூ.45 கோடியில் இந்த சோதனை மையத்தை அமைக்க உள் ளது. இதன் மூலம் ட்ரோன் ஆராய்ச்சி,  வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவை யான பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில்  வழங்கப்பட உள்ளன. ட்ரோன் உற்பத்தியில் தமிழ்நாடு  சர்வதேச மையமாக திகழும், பாது காப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பு தேவையை பூர்த்தி செய்ய வும் ட்ரோன் சோதனை மையம் வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை, ஆக.17- வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை (ஆக.18) புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வெள்ளிக் கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஆக.18) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஒரே நிலைப்பாடு: அமைச்சர்

சென்னை, ஆக.17- நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் ஒரே நிலைப்பாடு; இதில் இரட்டை வேடம் எதுவும் இல்லை என அமைச்சர்  ரகுபதி தெரிவித்துள்ளார். திமுக போராட்டம் நடத்துவதால் அதிமுக மாநாட்டிற்கு கூட்டம் வராது என  இபிஎஸ் பயப்படுகிறாரா? என கேள்வி  எழுப்பிய ரகுபதி, அதிமுக மாநாட்டிற்கு  மக்களும் போக மாட்டார்கள் என்பதால் அர்த்தமற்ற குற்றச்சாட்டு  வைக்கிறார்கள் என தெரிவித்திருக் கிறார்.

பாபா மீது புகார்: மாணவியை ஆஜர்படுத்த உத்தரவு

சென்னை, ஆக.17- பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது மின்னஞ்சலில் புகார் அளித்த மாணவி காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சிவசங்கர் பாபா மீதான வழக்கில்  விசாரணைக்கு தடை விதிக்க சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் மறுப்பு தெரிவித்துவிட்டார்.  தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 15 க்கு  ஒத்திவைக்கப்பட்டது.

டிசம்பரில் குரூப் 1 தேர்வு முடிவுகள்!

சென்னை, ஆக.17- குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் இந்த  ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப் படும் என தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப அரசு தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான, முதல்நிலைத் தேர்வு  நவம்பர் 19 ஆம் தேதி மாநிலம் முழுவ தும் நடைபெற்றது முடிவடைந்த நிலையில், குரூப் 2,2ஏ தேர்வுக்கு அறிவிப்பு கூடிய விரைவில் வெளி யாக உள்ளது. இந்நிலையில், குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றிய மோடி அரசு

புதுதில்லி, ஆக. 17 - ‘நேரு நினைவு அருங்காட்சி யகம் மற்றும் நூலகம்’ என்றி ருந்த பெயரை, ‘பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்’ என்று மோடி அரசு மாற்றம் செய்துள்ளது.  இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில்,  “சிறப்பு மிக்க நினைவுச் சின்னமான ஒரு நிறுவனம், இன்று முதல் புதிய பெயரைப் பெறுகிறது. உலகப் புகழ்பெற்ற நேரு நினைவு அருங்காட்சி யகம் மற்றும் நூலகம் (Nehru  Memorial Museum and Library - NMML) இனி பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூல கம் (Prime Ministers Museum and Library Socidty - PMML) என்று மாற்றப்படுகிறது. மோடியிடம் மிகப்பெரிய அளவில் பயம், தாழ்வு மனப்பா ன்மை, பாதுகாப்பின்மை உண ர்வுகள் உள்ளன. அதிலும் குறிப் பாக நமது முதல் மற்றும் நீண்ட காலம் பிரதமராக இருந்த நேரு வின் மீது அதிகமாக உள்ளது. மோடிக்கு நேரு மற்றும் அவரது பாரம்பரியத்தை மாற்றும், சிதை க்கும், அவதூறு செய்யும், அழிக்கும் ஒற்றை குறிக்கோள் மட்டுமே உள்ளது. எனவே, அவர் ‘சூ’ என்பதை எடுத்து விட்டு அதற்கு பதிலாக ‘ஞ’ என்று மாற்றியுள்ளார். உண்மையில் ‘ஞ’ என்பது அற்பத்தனம் மற் றும் கோபத்தையே குறிக்கிறது. ஆனால், சுதந்திரப் போரா ட்டத்தில் நேருவின் மகத்தான  பங்களிப்பையும், ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வ மான, தாராளமயமான அடித்தளத்துடன் கூடிய இந்திய தேசியத்தை கட்டியெழுப்பிய அவரின் சாதனைகளையும் மோடியால் அழிக்க முடியாது. இவை அனைத்தும் இன்று  மோடி, அவரது துதி பாடுபவர் களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. தொட ர்ந்து தாக்குதல் நடத்துகின்ற போதிலும் நேருவின் பாரம்பரி யத்தை உலகம் நன்கு அறியும், வரும் தலைமுறையினருக்கும் அவர் தொடர்ந்து ஊக்கம் அளிப்பவராக இருப்பார்”  என்று தெரிவித்துள்ளார்.