states

இடைத்தேர்தலில் பணியாற்றுவதால் எந்த பணியும் பாதிக்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,பிப்.16- ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பணியாற்றுவதால் எந்த பணியும்  பாதிக்கவில்லை என்று மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- உலக வரலாற்றிலேயே ஈரோடு  மாநகராட்சிக்கு தனி வரலாறு இருக்கிறது . 1917 ஆம் ஆண்டு தந்தை  பெரியார் ஈரோடு நகராட்சியை மாநக ராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததை 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கருணாநிதி மாநகராட்சியாக தரம் உயர்த்தினார். அதற்கு பின்  வந்த ஆட்சியாளர்களால் அடிப்படை  வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. மீண்டும் தற்பொழுது திமுக ஆட்சிக்கு  வந்ததற்கு பிறகு இந்த மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கொண்டு வருவதற்கான நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு 22 மருத்துவ மனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும்  13 மருத்துவமனைகள் கட்டப்பட் டுள்ளன. அதிமுக ஆட்சியில் ஏராள மான பணிகளை செய்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது நகைப் பிற்குரியது. அவர் சொல்வது அனைத்தும் மக்களுக்கு பொய் என தெரியும். ஈரோடு  மாநகராட்சி புறக்கணிக்கப்பட்ட மாநக ராட்சியாகவே தொடர்ந்து இருந்தது. ஈரோடு மாநகராட்சி தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.480 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார். ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பணியாற்றினாலும் எந்த அலுவல் சார்ந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை. அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கூட உருவாக்கவில்லை. இது குறித்து பேச எடப்பாடி பழனிசாமி தயாரா? இவ்வாறு அவர் கூறினார்.