states

ஹட்சன் பால், எம்.எம்.போர்ஜிங் நிறுவன பிரச்சனையில் அரசு தலையிட்டு தீர்வுகாண்க!

சிஐடியு வலியுறுத்தல்

சென்னை, மே 7- சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டம் மே 4,5 தேதிகளில் விருதுநகரில் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன், உதவி பொதுச் செயலாளர் வி.குமார், கே. திருச்செல்வன், எஸ்.கண்ணன், துணைத் தலை வர் ஆர்.சிங்காரவேலு உட்பட மாநில நிர்வாகி கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தொழிற்சங்கம் அமைத்ததற்காக தருமபுரி ஹட்சன் பால் மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனத்திலும், சிவகங்கை எம்.எம்.போர்ஜிங் நிறுவனத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலா ளர்கள் நிர்வாகங்களின் பழிவாங்கல் நட வடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்ச னையில் தமிழக அரசு தலையிட்டு சுமூக தீர்வு  காணவும், தொழில் அமைதியை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதுரை மாநகராட்சியில் தூய்மைப்பணி யில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த தொழிலா ளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்த ரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யா மல் அமல்படுத்திட வேண்டும். இது போன்று இதர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரி யும் தூய்மைப் பணி தொழிலாளர்களை நிரந்த ரப்படுத்திட வேண்டும்.  அரசு போக்குவரத்து, மின்சார வாரியம், அரசு  ரப்பர்கழகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் பீடி மற்றும் டேனரி தொழில்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஆண்டு கணக்  கில் நிலுவையில் உள்ளது. தமிழக அரசு உட டினயாக அனைத்து ஊதிய உயர்வு முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வந்து புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழி யர்களுக்கு பல ஆண்டு காலமாக கொடுக்கப் படாமல் நிறுத்திவைத்துள்ள ஓய்வுக்கால பணப்பயன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். ஓய்வூதியத்தை மாதாமாதம் வழங்க துரித நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திட வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்க வேண்டும் என்கிற உச்சநீதி மன்ற தீர்ப்பை தமிழகத்தில் உடன் அமலாக்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியங்களை தவிர, இதர 16 தொழில்வாரி நல வாரியங்களில் பணப்பயன்களை உயர்த்தி வழங்கிடவும், இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கிட வேண்டும். மேலும் முறைசாரா தொழி லாளர்களின் சமூக பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசிடம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சத விகிதம் நிதி ஒதுக்கிட வகை செய்யும் வகை யில் சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறை வேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நலவாரியங்களில் நேரடி பதிவை துவக்குக!

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமை யாக தளர்த்தப்பட் நிலையில் முறைசாரா நல  வாரியங்களில் நேரடி பதிவு, புதுப்பித்தல், கேட்புமனுக்கள் பெறுவது துவங்கப்பட வில்லை. ஆன்லைன் பதிவோடு ஆப்லைன் நேரடி பதிவும் துவங்கப்பட வேண்டும். பருத்தி,பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட ஜவுளித்தொழில் கடு மையாக பாதித்துள்ளது. இதுபோன்று மூலப் பொருட்களின் விலைஉயர்வால் குறு-சிறு-நடுத்தர தொழில்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி மற்றும் விற்பனை பாதித்  துள்ளது மட்டுமல்ல மக்களின் வாங்கும் சக்தி யும் குறைந்துள்ளது. இந்த பிரச்சனையில் தமிழக  அரசு தலையிட்டு விலை உயர்வுகளை கட்டுப் படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

காகிதம் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்க!

மணல் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடா மல் அரசே ஏற்று நடத்திட வேண்டும். கிரா மப்புற கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணலை மாட்டுவண்டி மூலம் வியாபாரம் செய்வோருக்கு தனி குவாரிகள் அமைத்திட வேண்டும். மேலும் அனைத்து வட்டார அள வில் அரசு மணல் கிடங்குகளை அமைத்து நியா யமான விலையில் மணல் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.  அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்ப டையில் விசாகா புகார் கமிட்டிகளை அமைப்  பதை தமிழக அரசு கண்காணித்து உறுதி செய்திட வேண்டும். காகித விலை உயர்வால் அச்சு ஊடகங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. சமூக மாற்றத்திற்கும், அரசியல் செயல்பாட்டுக்கும் அச்சு ஊடகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு காகிதத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், காகிதத்தின் மீதான இறக்கு மதி வரியை ரத்து செய்திடவும் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்  ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.