states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கம்போடியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டி யில் கோவையைச் சேர்ந்த சிறுவன் ஸ்ரீ சாய்  (8) 2 தங்கப் பதக்கங் களை வென்று அசத்தியுள் ளார். ஸ்ரீ சாய் இதுவரை பங்கேற்ற 23 போட்டிகளி லும் பதக்கம் மற்றும் கோப் பைகளை வென்றுள் ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பிடிக்கப்பட்ட அரிசிகொம்பன் யானை யை திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதி யான, களக்காடு - முண்ட ந்துறை வனப்பகுதியில் உள்ள கோதையாறு வனப்பகுதிக்கு கொ ண்டு செல்லப்படுகிறது. ஆனால் அரிசிகொம்பன் யானையை களக்காடு வனப்பகுதியில் விடு வதற்கு அப்பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரி வித்து, மணிமுத்தாறு சோதனைச் சாவடி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

கடலூரில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் 50,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.

நேட்டோ உறுப்பு நாடு களின் வருடாந்திர “பால்டிக்” பயிற்சியைத் தொடங்கிய ஒரு நாளு க்குப் பிறகு, அதே பால்டிக் கடல் பகுதியில் கடற் படை பயிற்சிகளை  டத்த உள்ளதாக ரஷ்ய ராணு வம் அறிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் மட்டும் 23.38 லட்சம் பக் தர்கள் தரிசனம் செய்து, 11 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி யுள்ளனர். 1.6கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலை யில், ரூ.109.99 கோடி  காணிக்கையும் பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என திருப்பதி தேவஸ்தான  அதிகாரிகள் தெரிவித்த னர்.

ஆந்திர மாநிலம் மதுர வாடாவில் மளிகை வியா பாரம் செய்வதாக கூறி  வீடு வாடகைக்கு எடுத்து  14 வங்கிகளில் 71  கணக்கு மூலம் ஆன் லைன் சூதாட்டம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 19 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து 53  செல்போன்கள், 7 லேப் டாப்களை போலீசார் பறி முதல் செய்து ரூ.5 கோடி யை முடக்க வங்கிகளு க்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.

மலையாள திரையுலகின் பிரபல நகைச்சுவை நடி கரும், மிமிக்ரி கலைஞ ருமான சுதி காரில் சொந்த ஊருக்கு திரும்பும் பொ ழுது திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் வேன் மோதியதில் பலியானார்.

பாலியல் உறவை விளை யாட்டாக அங்கீகரித்து ள்ளதாக வெளியான செய்திகளுக்கு சுவீடன் விளையாட்டுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரி வித்துள்ளது. சுவீடன் விளையாட்டு கூட்ட மைப்பில் பாலியல் (செக்ஸ்) கூட்டமைப்பு உறுப்பினர் என அங்கீ கரிக்கப்பட்ட பொறுப்பு எதுவும் தனியாக எதுவும் இல்லை என சுவீடன் விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

உலகச் செய்திகள்

மின்சாரத்தில் இயங்கும் வண்டிகளைப் பயன்படுத்துங்கள் என்று வியட்நாமின் துணைப் பிரதமர் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், தங்கள் வண்டிகளை மின்சார இயக்கத்திற்கு அல்லது மாசுபடுத்துதலைக் குறைக்கும் எரிபொருளுக்கு மாற்றினால் அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாவது மாநாடு ஜூன் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் அமைப்பைப் பலப்படுத்துவது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவது, திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவை குறித்து இந்த மாநாடு விவாதிக்கும் என்று கட்சி அறிவித்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள சகோதர அமைப்புகளிடம் இருந்து ஆதரவு செய்திகளை எதிர்பார்ப்பதாகக் கட்சி தெரிவித்திருக்கிறது.

சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிற்கு புதிய ஊக்கம் கிடைத்துள்ளது. விளாடிவோஸ்டோக் நகரை வர்த்தக மையமாக மாற்றியுள்ளதால் வடகிழக்கு சீனாவில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கவிருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய ரஷ்யத் துறைமுகமான விளாடிவோஸ்டோக் மூலமாக வர்த்தகத்திற்கான புதிய பாதைகளை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.