states

பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை எப்போது?

சென்னை,ஏப்.21- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளியன்று(ஏப்.21) காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க துவங்கிய தும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலு மணி, பேரவைத் தலைவரின் அனுமதி யின்றி சில கருத்துக்களை தெரி வித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வேலுமணி பேசியது அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி பேசுவதையும் நேரலை  செய்ய வேண்டும் என்று அதிமுகவி னர் வலியுறுத்தி வந்தனர். இதற்காக பேரவையில் அமைச்சர்களின் பதிலு ரையை புறக்கணித்து வந்தனர். இந்த  நிலையில் முதலமைச்சரின் பதிலு ரையையும் புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர். அப்போது பேசிய பேரவைத் தலைவர் மு. அப்பாவு, “எதிர்க்கட்சித் தலைவர் இரண்டு மணி நேரம் பேசும் போது உணவு இடைவேளைக்கு கூட செல்லாமல் முதலமைச்சர் அவை யில் இருந்தார். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது  வேதனையாக உள்ளது. எதிர்க்கட்சியி னர் பேசுவதற்கு அதிக நேரம் வழங்கப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கேள்வி  நேரத்தை முதலில் நேரடி ஒளிபரப்பு  செய்தோம். தற்போது நிகழ்ச்சி நிரலில் உள்ளதையும் செய்து வருகிறோம். எதிர்க்கட்சி தலைவர் பேசுவதையும் நேரலை செய்யும் கோரிக்கை மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து நிகழ்வுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறார்கள். எனவே, நேரமில்லாத நேரத்திலும் பேசும்போது சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்? என்பதையும் விவாதத்தின்போது தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் குறித்தும் அவையில் நடந்து கொள்ள வேண் டிய ஒழுங்கு பற்றியும் உறுப்பி னர்கள் அனைவரும் நன்கு புரிந்து கொண்டு அவையின் மாண்புகளை காப்பாற்ற வேண்டியுள்ளது. எனவே, அதற்காக தங்களை தாங்களே முழுமையாக தயார் படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது என்றும் பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிவு மறைவின்றி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதில் முதல்வரும் உறுதி யாக இருக்கிறார். எனவே, படிப்படி யாக நிறைவேற்றப்படும் என்றும் அவர்  தெரிவித்தார்.