states

ஆளுநர் உரையின்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை என்ன?

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சட்ட மன்றப் பேரவையில் ஆளுநர் உரை யாற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து பேரவைச் செயலகம் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அணிவகுப்பு அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 9.15 மணிக்குள் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் அமர வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் காலை 9.20 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்திலுள்ள சட்ட மன்றப் பேரவை மண்டபத்தின் முகப்பில் வருகை தருவார். சட்டமன்றப் பேரவைத் தலை வர் மற்றும் சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர் அவரை வரவேற்பார்கள். மாநிலக் காவல் துறை அணிவகுப்பு மரியாதைக்குப் பின்னர், அவரை சட்டமன்றப் பேரவை மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். இவ்வாறு அணிவகுத்து அவர்கள் சட்டமன்றப் பேரவைத் தலைவர் இருக்கைக்கு எதிரிலுள்ள வாயில்களை அடைவார்கள்.  மேடையில் சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஆளுநரின் வலப்புறத்தில் அமர்வார். ஆளுநரின் முதன்மைச் செயலாளரும், மெய்க்காப்பாளர்களும் மேடைக்குப் பின்புறத்தில் அமர்வார்கள். ஆளுநர் இருக்கையில் அமரும் வரையில் உறுப்பினர்கள் அனைவரும் நின்றுகொண்டு இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து முதல் நிகழ்ச்சியாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பின்னர், ஆளுநர் அவர்கள் தமது உரையினை நிகழ்த்துவார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 17-ஆவது விதியின்படி, ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, ஒழுங்குப் பிரச்சனையினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிய உடனே, அவ்வுரையின் தமிழாக்கம் பேரவைத் தலைவர் அவர்களால் வாசிக்கப்பெறும். பின்னர் ‘நாட்டுப் பண்’ பாடப்படும். அவ்வமயம் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். முதல் நிகழ்ச்சியாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். பின்னர், ஆளுநர் தமது உரையினை நிகழ்த்துவார்கள். தேசிய கீதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 17-ஆவது விதியின்படி, ஆளுநர் உரை நிகழ்த்தும்போது, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ உறுப்பினர் யாரும் தமது பேச்சினாலோ, ஒழுங்குப் பிரச்சனையினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிய உடனே. அவ்வுரையின் தமிழாக்கம் பேரவைத் தலைவர் அவர்களால் வாசிக்கப்பெறும். பின்னர் ‘நாட்டுப் பண்’ பாடப்படும். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.