states

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவோம்

சென்னை, மார்ச் 30- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி வியாழனன்று (மார்ச் 30 ) 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30 அன்று, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச்  30ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு முழு வதும் நடத்தப்படும்.  போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும்,  வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.

கேரள முதல்வருடன் நானும்...

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், அம்மாநில முதல மைச்சர் பினராயி விஜயனுடன் நானும்  சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற் கிறேன். வைக்கம் போராட்டம் நடை பெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம். தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலை யாள மொழிபெயர்ப்பு வெளியிடப் படுகிறது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகியவற்றின் கூட்டு வெளியீடாக இது வெளியிடப்படவுள்ளது.  இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப்  பதிப்புகளும் விரைவில் வெளியிடப் படும்.

நவ.29இல் விழா

இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று,  தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும்  பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக் கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்.

‘வைக்கம் விருது’

எல்லை கடந்து சென்று வைக்கத் தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப் பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்க ளுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினை விடத்தை நவீனமுறையில் மறுசீரமைக் கவும், பெரியார் தொடர்பான நினைவுப்  பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவ தற்கும் ரூ. 8 கோடியே 14 லட்சம் நிதி  ஒதுக்கீடு செய்யப்படும்.

அருவிக்குட்டியில் நினைவிடம்

தந்தை பெரியார் கைது செய்யப் பட்டு முதன்முதலாக சிறை வைக்கப் பட்டிருந்த ‘அருவிக்குட்டி’ கிராமத்தில்  பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

போட்டிகள்-கருத்தரங்கம்

தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப்  பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்க ளுக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும்.  இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். நூற்றாண்டு விழா மலர் வைக்கம் போராட்ட நூற்றாண்டு  குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிட மிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ பத்திரிகை மூலம் கொண்டு வரப்படும். இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.