states

56,000 பணியிடங்களை நிரப்பக்கோரி மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 9 - 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மின்வாரிய அலுவல கங்கள் முன்பு ஜூலை 20 அன்று  காத்திருப்பு போராட்டம் நடை பெறுகிறது. இதுதொடர்பாக மின்வாரிய தலை வரிடம் வெள்ளியன்று (ஜூலை 8) தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங் கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கடி தம் கொடுத்துள்ளது. அதன் சுருக்கம் வருமாறு: மின்வாரிய ஊழியர்களின் கோரிக் கைகள் மீது தீர்வு காண வலியுறுத்தி  பலமுறை நேரில் பேசியும், கடிதம் கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை. ஆகவே, ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருக்கும், மின்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

ஒப்பந்த பேச்சுவார்த்தை

மின்வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மின்வாரிய ஆணை 2ஐ (நாள் 12.4.2022) முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 56 ஆயிரம் காலி பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆணை 100 தொடர்பாக தமிழக அரசின் உத்தர வாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தம்  உருவாக்க வேண்டும். வடசென்னை அனல் மின் நிலையம் அலகு-3ன் இயக்கம் மற்றும்  பராமரிப்பு பணிகளை முழுவதுமாக அயல் பணி ஒப்படைப்பு முறையை (அவுட்சோர்சிங்) கைவிட வேண்டும். துணை மின் நிலைய பணிகளை அவுட்சோர்சிங் முறையில் கையாள பிறப்பிக்கப்பட்ட அனைத்து ஆணைக ளையும் திரும்ப பெறுவதோடு, உரிய பதவி அனுமதிகளை வேண்டும். மறு பணியமர்த்தும் (ரிடெப்ளாயி மென்ட்) முறையை கைவிட்டு, பதவி உயர்வின் மூலம் பணி இடங்களை நிரப்ப வேண்டும், தரமான தளவாட பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20 அன்று வட்ட மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய   தலைமை அலுவலகம் முன்பு காத் திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். எனவே தொழில் அமைதியை நிலை நாட்ட தகுந்த தீர்வு காண வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.