states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரஷ்ய அரசுக்கு எதிராக திடீரென ஆயுதமேந்தி வன்முறையில் ஈடு பட்ட வாக்னர் குழு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை விட்டு வெளியேறி அண்டை நாடான பெலா ரஸுக்கு புறப்பட்டதால்  வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும்! அவர் மீது எவ்வித வழக்கும் தொ டரப்படாது என ரஷ்ய அரசு செய்தித் தொடர்  பாளர் டிமிட்ரி பெஸ் கோவ் அறிவித்துள்ளார்.

60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தில்லி, மும்பை இரண்டு பகுதிகளிலும் ஒரே நாளில் பருவமழை துவங்கியது. தில்லியில் 2 நாட்களுக்கு முன்ன தாகவும், மும்பையில் 2  வாரம் தாமதமாகவும் அதாவது ஜூன் 25 அன்று பருவமழை துவங்கி யது. கடைசியாக 1960இல் இது போன்று ஒரே நாளில் தில்லி, மும்பையில் பருவமழை துவங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவிக்கிறது.

மல்யுத்த வீராங்கனை கள் அளித்த பாலியல் குற்றச்சாட்டு அறிக்கை களை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்  பொது வெளியில் கசிய விடுகிறார். மேலும் பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவ ரிக்கும் போது அவர்  சிரித் தார் என மல்யுத்த வீராங் கனை வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப் பாறை அருகே கல்கொத் தனூர் என்ற இடத்தில் அரசு பேருந்து - கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.