states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பஞ்சாப்பில் வாயுக் கசிவு :   11 பேர் மூச்சுத் திணறி உயிரிழப்பு

லூதியானா, ஏப். 30- பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரான லூதியானா நகரில் உள்ள கியாஸ்புரா பகுதியில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் குளிர்விக்கும் இயந்திரத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் மூச்சுத்திணறி  10 மற்றும் 13 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் உட்பட 5  பெண்கள், 6 ஆண்கள்  என 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 4 பேர் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து அறிந்து தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, வாயு கசிவு நேர்ந்த பகுதியைச் சுற்றியுள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

திருச்சுழி அரசு கல்லூரி கட்டிடப் பணியில் 2  மாணவர்கள் பலி :  பொறியாளர் உட்பட 3 பேர் கைது

திருச்சுழி, ஏப்.30- திருச்சுழி அருகே அரசு கலைக் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வழக்கில் கட்டிடப் பொறியாளர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஹரிஷ் குமார் (15). அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரவிச்செல்வம் (17) . இருவரும் பள்ளித் தேர்வு முடிவடைந்ததால், மேல் படிப்புச் செலவுக்காக மேலேந்தல் பகுதியில் நடைபெற்று வரும் அரசு கல்லூரி கட்டிடப் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து   திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலை யில்,   கட்டிட பொறியாளர் ஜெயசீலன் ராஜா, மேற்பார்வை யாளர்கள் பால்சாமி,  விஜயராகவன் ஆகியோரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரத்தில் ரப்பர் குடோனில் ரூ 1.50 கோடி மதிப்பிலான ரப்பர் எரிந்தது

விவசாயிகள் கவலை

குலசேகரம், ஏப்.30- கன்னியாகுமரி மாவட்டம் குல சேகரத்தில் ரப்பர் உலர்த்தும் மையம் மற்றும் குடோன் எரிந்து ரூ1.50 கோடி ரப்பர் எரிந்து நாசமா னது.   இது அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்ட மக்களின் வாழ்  வாதாரமாக விளங்கக்கூடிய ரப்பர்  விவசாயம் செய்து வரும் முக்கிய மான பகுதி குலசேகரம் பகுதியா கும். இப்பகுதியில் அரசினால் அங்கீ கரிக்கப்பட்ட மத்திய மாநில அரசு களிடம் இருந்து மானியம் பெற்று நடத்தக்கூடிய ரப்பர் விற்பனை கூடம் உள்ளது.

இதில் ரப்பர் விவ சாயிகள், உற்பத்தியாளர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட உறுப்பி னர்கள் உள்ளனர்.  ரப்பர் விவசாயி கள் பெரும்பாலானோர் இச்சங்கத் தின் வழியாக நடத்தப்படும் ரப்பர்  உலர்த்தும் மையத்தில் ரப்பரை  உலர வைப்பதும் பின்பு கூடத்தில் விற்பனை செய்வதுமாக உள்ள னர். உலர்ந்த ரப்பர் ஷீட்டுகளை பக்குவமாக பாதுகாப்பாக வைப்ப தற்கு உலர்த்தும் மையம் அருகில் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ரப்பர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ரப்பர் பால் வடிக் கும் தொழில் விடுமுறைக்காக நிறுத்  தப்பட்டதால் இப் பகுதி விவசாயி களின் ரப்பர் ஷீட்டுக்கள் கோடனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தாகதெரிகிறது.இந்நிலையில் ஞாயிறு மதியம் திடீரென ரப்பர்  உலர்த்தும் மையத்தில் தீ பற்றி  எரிந்துள்ளது. தொடர்ந்து  பக்கத்தில் உள்ள குடோனிலும் தீ பரவியது.  ரப்பர் ஷீட்டில்பிடித்த தீ மள மள வென  பற்றியது. இதை  பார்த்த வர்கள்  தீயணைப்பு துறைக்கு தக வல் தெரிவித்தனர். குலசேகரம் தீய ணைப்பு துறையினரும், பொது மக்களும் இணைத்து தீயை அணைப்பதற்கான முயற்ச்சியை மேற்கொண்டனர். தீயை கட்டுப் படுத்த முடியவில்லை இதனால் தக்கலை, குழித்துறை ஆகிய பகுதி யிலிருந்து தீயணைப்பு படை வீரர் களை வரவழைத்து சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்  குள் கொண்டு வந்தனர்.  சங்க நிர்வாகிகள் கூறும்போது சுமார் 1.50 கோடிக்கான ரப்பர் ஷீட்டு மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலா னது என்றனர். தீப்பிடித்ததற்கான  காரணங்கள் குறித்து குலசேகரம்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். ரப்பர் உலர்த்துவதற்காக வும் மற்றும் விற்பனை செய்வ தற்காகவும் வைத்திருந்த விவசாயி கள் மிகவும் வேதனையில் உள்ள னர்.

விருதுநகர் சந்தை  கடலை எண்ணெய் விலை உயர்வு உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு விலை சரிவு  

விருதுநகர், ஏப்.30- விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் விலை  உயர்ந்துள்ளது. உருட்டு உளுந்தம் பருப்பு,  பாசிப்பருப்பு, துவரம் பருப்பின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளி யிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் ரூ.3050க்கு  விற்பனையான நிலையில் இந்த வாரம் திடீரென டின் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.3100க்கு விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு புதுஸ் நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.11200க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை  ஒன்றுக்கு ரூ.200 குறைந்து தற்போது ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இதேபோல் துவரம் பருப்பு புதுஸ் லையன் வகையானது குவிண்டால் ஒன்று ரூ.12 ஆயிரம்  வரை விற்கப்பட்டு வந்த நிலையில் மூட்டை ஒன்றுக்கு  ரூ.300 குறைந்து தற்போது ரூ.11,700க்கு விற்பனையாகிறது. பாசிப் பருப்பு  100 கிலோ கடந்த வாரம் ரூ.10,300க்கு  விற்பனையான நிலையில், குவிண்டால் ஒன்றுக்கு இந்த  வாரம் ரூ.200 வரை குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.10,100க்கு  விற்கப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு பர்மா நாடு வகையானது கடந்த வாரம் குவிண்டால் ஒன்று ரூ.9500க்கு விற்கப்பட்டு  வந்தது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 குறைந்து, தற்போது ரூ.9200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகையானது கடந்த வாரம் ரூ.11,100க்கு  விற்கப்படு வந்த நிலையில் இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300 வரை  குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.10,800க்கு விற்பனையாகிறது. பிற உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,ஏப்.30- தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் மே 1 முதல் 3 வரை ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, மே 1ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது  முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, திண்டு க்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ள்ளது. மே 2ம் தேதி: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரு ம்பாலான இடங்களில் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ள்ளது.  மே 3ம் தேதி: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, சேலம், நாமக்கல், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோயம் புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேதினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஏப்.30 மே தினத்தை முன்னிட்டு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக் கள் தெரிவித்துள்ளனர். கி.வீரமணி நாளும் உழைத்து புது உலகம் காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மே நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்; அவன் காணத் தகுந்தது வறுமையாம் - அவன் பூணத் தகுந்த தும் பொறுமையாம்’’ என்ற நிலை மாறிட, நாளும் உழைத்து புது உலகம் காண்போம் என்று அவர் கூறி யுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:   தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பி னால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிற நிலையில் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1-ந் தேதி அமைய வேண்டும்.    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:  தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், தொழிலாளர் விரோத போக்கு களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம்.  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:   1884 முதல் 1889 வரை உலக அரங்கில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியின் நீட்சிதான் இந்த மே தினம். தொழிலாளர் வர்க்க த்திற்குச் சவால்கள் நிறைந்த இச்சூழலில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்.

குரூப் -1 ல் வெற்றி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி

சென்னை, ஏப். 30- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் குரூப் -1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு ரூ.10ஆயுரம் உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப்படு கிறது. இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தொகுதி-1, 95 காலி பணியிடங்க ளுக்கு, 2,162 பேர் முதன்மைத் தேர்வு எழுதும் வாய்ப்பை பெற்றுள்ளனர். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, முதன்மை தேர்வில் வெற்றி பெற தயார் செய்யும் பொருட்டு, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, அவர்களுள் 100 மாணவர்களுக்கு மட்டும் தகுதி, திறன், நுழைவுத் தேர்வு, அரசின் இட ஒதுக்கீடு அடிப்படை யில் மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அனுபவம் மிக்க வல்லுநர் குழுவின் பரிந்துரை யின்படி தேர்வு செய்து, முழு நேர பயிற்சி அளிக்க உள்ளோம். நுழைவுத் தேர்வில் தகுதிபெறும் 100 மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் மூன்று மாதங் களுக்கு உதவித்தொகை வழங்கப் படும். உதவித்தொகை பெற இயலாத மாணவர்களும், முதன்மைத் தேர்வுக் கான தொடர் மாதிரி தேர்வு மற்றும் வகுப்புகளில் பங்கு பெறலாம். நேரில் வந்து பயிற்சி பெற இயலாத வர்களுக்கு முதன்மை தேர்வுக்கான பாடத் குறிப்புகள் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், மே இரண்டாம் வாரம் முதல் துவங்கப் பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவு பெறும்.  எனவே முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பிற மாணவர்கள் அனைவரும் தொலை பேசி மூலமாக 044-24358373, 24330095, 9940069739 காலை 10 மணி  முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் மாணவர்கள் www.mntfreeias.com என்ற இணை யதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.