states

விருதுநகர் சந்தை துவரை, உளுந்து, பாசிப் பயறு, மசூர் பருப்பு விலை கிடுகிடு உயர்வு: பொது மக்கள் அதிர்ச்சி

விருதுநகர், மார்ச் 26- விருதுநகர் சந்தையில் துவ ரம் பருப்பு, உளுந்து, மசூர் பருப்பு,  பாசிப் பயறு ஆகியவற்றின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பெண்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்  விபரம் வருமாறு: கடலை எண்ணெய் சரிவு : கடந்த வாரம் 15 கிலோ கடலை  எண்ணெய் விலை ரூ.3150 என  விற்பனை செய்யப்பட்ட நிலை யில், இந்த வாரம் டின்  ஒன்றுக்கு  ரூ.50 குறைந்து தற்போது ரூ. 3100க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் உயர்வு : அதே வேளை பாமாயில் விலையானது வாரந்தோறும் அதிகரித்து வரு கிறது. கடந்த வாரம் 15 கிலோ ரூ. 1520 என விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.10  உயர்ந்து ரூ.1530க்கு விற்கப்படு கிறது. முண்டு வத்தல் : முண்டு வத்தி லின் ஆரம்ப கட்ட விலை சற்று  குறைந்துள்ளது. அதாவது கடந்த  வாரம் 100 கிலோ ரூ.19 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை விற்கப் பட்ட நிலையில், இந்த வாரம் ஆரம்ப  கட்ட விலை ரூ.17 ஆயிரமாக குறைந்துள்ளது. துவரம் பருப்பு : கடந்த வாரம்  துவரம் பருப்பு 100 கிலோ புதுஸ்  லையன் வகை ரூ.11,200 என விற்  கப்பட்ட நிலையில், தற்போது குவிண்டாலுக்கு ரூ.300 வரை உயர்ந்துள்ளது. இதனால் மூட்டை  ஒன்று ரூ.11500 ஆக விற்கப்படு கிறது.

உருட்டு உளுந்து : இதேபோல்,   கடந்த வாரம் உருட்டு உளுந்தம் பருப்பு  100 கிலோ ரூ.10,800 என  விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.11,100 என விற்கப்படுகிறது. இதேபோல்,  உருட்டு உளுந்து (நாடு பர்மா எப்ஏக்யூ) வகை கடந்த வாரம்  குவிண்டால் ரூ.8800க்கு விற்கப்  பட்டு வந்த நிலையில், தற்போது  ரூ.300 உயர்ந்து மூட்டை ஒன்று ரூ. 9100க்கு விற்பனையாகிறது. இந்த  விலை உயர்வினால் இல்லத்தரசி கள் மற்றும் பொது மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும், உளுந்து ( நாடு) கடந்த  வாரம் ரூ.7600க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.400 உயர்ந்து குவிண்டால் ஒன்று  ரூ.8ஆயிரத்திற்கு விற்பனையாகி றது. இதேபோல் உளுந்து  லையன் வகையும் ரூ.400 உயர்ந்து ரூ.8ஆயி ரத்திற்கு விற்கப்படுகிறது. பாசிப் பயறு :  கடந்த வாரம்  100 கிலோ பாசிப்பயறு ( இந்தியா)  லையன் மீடியம் வகை ரூ.9500க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் ரூ.500 உயர்ந்து தற்  போது ரூ.10ஆயிரத்திற்கு விற்ப னையாகிறது. மசூர் பருப்பு : இதேபோல்  கடந்த வாரம் 100 கிலோ மசூர் பருப்பு ( பருவட்டு ) ரூ.9500க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.500 உயர்ந்து மூட்டை ஒன்று ரூ.10ஆயிரத்தற்கு விற் பனை செய்யப்படுகிறது. மசூர் பருப்பு, துவரம் பருப்பு, உருட்டு உளுந்தம் பருப்பின் விலை ஒரே  வாரத்தில் உயர்ந்துள்ளது. இத னால், ஹோட்டல் உரிமையாளர் கள் கலக்கம் அடைந்துள்ளனர்.