states

img

அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராக விஜு கிருஷ்ணன் தேர்வு

கே.வரதராஜன் நகர்/திருச்சூர், டிச.16- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  பொதுச் செயலாளராக விஜு கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாடு திருச்சூரில் டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கி 16 வெள்ளி யன்று நிறைவடைந்தது.  இம்மாநாட்டில் சங்கத்தின் தவைராக டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளராக விஜு கிருஷ்ணன், பொருளாளராக பி.கிருஷ்ண பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டாக்டர்  அசோக் தாவ்லே மகாராஷ்டிராவைச் சேர்ந்த வர். மகாராஷ்டிராவிலும், அகில இந்திய அள விலும் விவசாயிகள் எழுச்சியின் போராட்டக் கள நாயகனாக திகழ்ந்தவர் ஆவார்.  பொதுச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டுள்ள   விஜு கிருஷ்ணன் கேரளத்தைச் சேர்ந்த வர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ கத்தில் பயின்றவர். முனைவர் பட்டம்பெற்றவர். இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக தமது பொது வாழ்க்கையை துவக்கி, விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளராக பல ஆண்டு காலம் செயலாற்றியவர்.  தமிழ்நாட்டில் இருந்து துணை தலைவராக பெ.சண்முகம், இணைச் செயலாளராக டி.ரவீந்திரன் உட்பட 21 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மத்தியக்குழுவுக்கு நிர்வாகிகள் உள்ளிட்ட 149 பேர்  தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ் நாட்டில் இருந்து பெ.சண்முகம், டி.ரவீந்திரன், சாமி நடராஜன், கே.பி.பெருமாள், வி.சுப்ரமணி யம், அ.விஜயமுருகன், எஸ்.அனு, பி.டில்லிபாபு, ஏ.துளசி நாராயணன், பி.பெருமாள் என 10 பேர் இடம்பெற்றுள்ளனர். புதுச்சேரியில் இருந்து  சங்கர் சிறப்பு அழைப்பாளராக தேர்வுசெய்யப் பட்டார். மாநாட்டின் நிறைவாக திருச்சூரில் லட்சக் கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 60 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழக பிரதிநிதிகள் சார்பாக சாமி. நடராஜன், கே.பி.பெருமாள், அனு, துளசி நாராயணன் உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்றனர். திருச்சூரிலிருந்து செய்தி, படங்கள்  -சி.முருகேசன்