ஆன்மீகம் பற்றி பேச வேண்டிய மதுரை ஆதீனம் அரசியல் பேசு கிறார். புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் மகாத்மா காந்தியையும், நேருவையும் இழித்தும் பழித்தும் பேசுகிறார். மோடியை நல்லவர் என சித்தரிக்கிறார். யார் நல்லவர்கள் என்பதை ஆதீனம் புரிந்து கொள்ள வேண்டும். மதுரை ராமாயணச்சாவடியில் உள்ள கோபுரத்தில் காந்தி யின் சிலையும், நேருவின் சிலையும் உள்ளது. மதுரை நகரின் பழமையான தெருக்க ளில் ஒன்றான எழுத்தாணிக்காரத் தெருவில் அக்க சாலை விநாயகர் கோவில் (அக்க விநாயகர் கோவில்) உள்ளது. அக்கசாலை என்பது நாணயங்களை வார்க்கும் இடமாகும். இந்த கோவில் கோபுரத்தில் காந்தி சிலை உள்ளது. அறநிலையத்துறையின் மீது பாஜக கண் வைப்பதற்குக் காரணம், அறங்கா வலர் குழுவில் உள்ள இட ஒதுக்கீடு பிரச்சனைதான். நிர்வாகப் பொறுப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர். இங்கும் இட ஒதுக்கீடு உள்ளதுதான். இட ஒதுக்கீடும், சமூக நீதியும் சங்பரிவார் கூட்டத்தின் கண்களை உறுத்துகிறது. அதனால் தான் அறநிலை யத்துறையை கலைக்க வேண்டும் என்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெள்ளியம்பலம்; சிதம்பரம் நடராஜர் கோவில் பொன்னம்பலம். மீனாட்சியம்மன் கோவில் வருமானம் ரூ. 50 கோடிக்கு மேல் உள்ளது. இதற்கும் அதிகமாக சிதம்பரம் நடராஜர் கோவில் வருமானம் இருக்க வேண்டும். ஆனால் அங்கு ஐந்து பைசா கூட இல்லை. கேட்டால் யாரும் கணக்குக் கேட்கக் கூடாது என்கிறார்கள். என்ன நியாயம்?
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆற்றிய உரையிலிருந்து...