states

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை கட்டணமில்லை

சென்னை, மே 24- அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டண மில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகங்க ளால் இயக்கப்படும் அனைத்து வித மான பேருந்துகளிலும் 5 வயது வரை யிலான குழந்தைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், அரசுப் பேருந்து களில் 5 வயது வரை குழந்தை களுக்கு கட்டணமில்லை என்ற அறிவிப்பை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 5 வயதுக்கு மேல் 12 வயது  வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் ‘அரை’ டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.