லக்னோ, பிப்.11- ஆசிரியர் தாக்கியதால் உயிரிழந்த பத்தாம் வகுப்பு பட்டியலின மாணவர் குடும்பத்தினருக்கு வழங்கிய காசோலை அடையாளப்பூர்வமானது மட்டும்தான் என்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவுரையா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அவு ரையா மாவட்டத்தில் தேர்வில் தவறு செய்ததாகக் கூறி பள்ளி ஆசிரியர் ஒருவர் நிகில் டோஹ்ரே என்ற மாண வரை அடித்திருக்கிறார். 2022 செப்டம் பர் 7 அன்று நடந்த சம்பவத்தால் கடு மையாகக் காயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சிகிச்சை தரப்பட்டு வந்த நிலை யிலும், அந்த மாணவரின் உடல் நிலை மோசமாகிக் கொண்டே சென்றது. செப்டம்பர் 24 ஆம் தேதியன்று, ஆசிரியர் மீது மாணவர் நிகிலின் தந்தை ராஜூ டோஹ்ரே காவல்துறையிடம் புகார் அளித்தார். சாதி ரீதியான வார்த் தைகளைச் சொல்லித் தன்னை அவமா னப்படுத்தியதாக அதில் தெரிவித்தி ருந்தார். இந்நிலையில், செப்டம்பர் 26 ஆம் தேதியன்று சிகிச்சைகள் பலனளிக்காமல் நிகில் உயிரிழந்தார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிகில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன்வராததால் பல காவல்துறை வாகனங்கள் எரிக்கப் பட்டன. சட்டம் ஒழுங்கு சூழல் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இடாவா நாடாளு மன்ற உறுப்பினரின் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர், 3 லட்சம் ரூபாய்க் கான காசோலையையும் மாணவரின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இந்தப் பிரச்சனை பிரதமர் வரையில் சென்றது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இருப்பிடம் வழங்குவது பற்றி பிரத மர் குறிப்பிட்டார். தங்களுக்கு வழங் கப்பட்ட காசோலையை பணமாக்குவ தற்காக வங்கியில் செலுத்தியபிறகு, காசோலைக்கான கணக்கில் பண மில்லை என்று திரும்பி வந்துவிட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சிய ரிடம் கேட்டபோது, அப்போதைக்கு அடையாளப்பூர்வ ஆதரவு தருவ தற்காகவே காசோலை வழங்கப் பட்டது. நிதி வழங்குவதற்கான ஏற்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார். இந்தப் பிரச்சனை சமூக ஊடகங்கள் வழியாகப் பரவியதால், தற்போது விநோதமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “மாணவர் உயிரிழந்ததற்கு ஆசிரியர் அடித்தது காரணம் இல்லை என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. இத னால் காசோலையை ரத்து செய்து விட்டோம்” என்கிறார். தங்களை ஏமாற்றிவிட்டதாக மாணவர் நிகிலின் குடும்பம் மாவட்ட ஆட்சியர் மீது குற்றம் சாட்டியுள்ளது.