சென்னை, ஜன.11- பொங்கல் விழா அழைப்பிதழில் அரசு இலச்சினையை புறக்கணித்துள்ளது ஆளுநரின் வேண்டாத வேலை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரச மைப்புச் சட்டம் இயற்றிய அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது, ‘சென்ட்ரல் கவர்மெண்ட் என்ற சொல்லுக்குப் பதிலாக யூனியன் கவர்மெண்ட் என்ற சொற்றொடரைப் போடவேண்டும்; காரணம், சென்ட்ரல் கவர்ன்மெண்ட் என்றால் ‘’மத்திய அதிகாரக் குவிப்பு’’ என்ற பொருள் வந்துவிடக் கூடும். அதைத் தவிர்க்கவே ‘ஒன்றிய அரசு’ யூனியன் கவர்மென்ட் என்ற சொல்லாக்கம் இடம்பெற்றது’’ என்ற பழைய வரலாற்று நிகழ்வை ‘இந்து’ ஆங்கில நாளேட்டிலும் வெளிவந்துள்ளது. திட்டமிட்ட பின்னணியோடு வம்பு வளர்ப்பதற்காகவே - பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த ஆளுநர் இரவி, அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசினைப் புறக்கணித் துள்ளார். இது வேண்டாத வேலை அல்லவா? இவர் எங்கே ஆளுநர் ? தமிழ்நாட்டுக்குத் தானே! இவர் எந்த அரசின் நிதியிலி ருந்து ஊதியம் வாங்குகிறார்? எங்கே குடியிருக்கிறார்? தில்லியிலா? யூனியன் லிஸ்ட் ஒன்றிய அரசு பட்டியல் என்றுதான் குறிப்பிட் டுள்ளது. சென்ட்ரல் லிஸ்ட் என்று அல்ல என்பதை ஆளுநர் படித்துப் புரிந்து கொள்ளட்டும். தமிழ் மொழியை அரைகுறை யாக கற்று பேட்டி கொடுத்துக் கேலிக்கு ஆளாகியதை எண்ணி, தமிழ் நாட்டு மக்கள் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.