சென்னை, ஜூலை 21- அரசு கல்லூரிகளில் முதுநிலை மாணவர்கள் சேர்க்கை தாமதமாகும் விஷயத்தில் தமிழக அரசு உடனே தலை யிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் செயல்படும் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 109 கல்லூரிகளில் முதுநிலை பாடப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் சுமார் 24 ஆயிரம் இடங்கள் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தி லும், பாரதியார் பல்கலைக்கழகத்திலும் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப் படாமல் இருப்பதால், அரசு கல்லூரி களில் முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிப்பு தாமதமாகி வருகிறது. தமிழக அரசு 22.05.2024 அன்று, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கை குறித்து வெளியிட்டுள்ள அரசாணை எண் 110 இல், அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளில் முதுநிலை மாண வர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளி யிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசிடமிருந்து இதுவரை அறி விப்பு வெளிவராத நிலையில், உதவி பெறும் கல்லூரிகளும், சுயநிதிக் கல் லூரிகளும் ஐந்தாம் பருவம் வரை வெளி வந்துள்ள தேர்வு முடிவுகளின் அடிப் படையில் முதுநிலை மாணவர் சேர்க்கை யினை முடிக்கும் நிலையில்உள்ளனர். அரசு கல்லூரிகள், தமிழக அரசின் அரசாணைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதால், பல்கலைக்கழ கங்களின் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றன. அரசு கல்லூரிகளில் சேர்க்கை அறி விப்பு வெளியிட தாமதமாவதால், உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் சேர வேண்டிய கட்டாயத்துக்கு மாண வர்கள் தள்ளப்படுகின்றனர்.மேலும், தாமதமாக அரசு கல்லூரிகளில் மாண வர் சேர்க்கை நடைபெறுவதால், முதல் பருவ தேர்வுக்கு மிக விரைவாக தயா ராக வேண்டிய அவசியமும் உள்ளது. இளநிலை தேர்வு முடிவுகளை வெளியிடுக! எனவே, இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடாத சென்னை மற்றும் பாரதி யார் பல்கலைக்கழகங்கள் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், மேலும் எதிர் வரும் காலங் களில் இதுபோன்ற போன்ற தாமதத்தை தவிர்ப்பதற்கு, கல்லூரிக் கல்வி இயக் குநரால் வெளியிடப்பட்டுள்ள கல்வி ஆண்டிற்கான கால அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் கடைப்பிடிக்க உரிய வழிகாட்டுதல் களை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.