1950 முதல் 2010 வரை யிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் இல்லி னாய்ஸில் கத்தோலிக்க மதகுருக்களால் கிட்டத் தட்ட 2,000 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக அமெ ரிக்க அட்டர்னி ஜெனரல் குவாம் ரவுல் அறிக்கை மூலம் குற்றச்சாட்டியுளார்.
நேபாளத்தின் மேற்கு பகுதி யில் புதனன்று அதிகாலை 4.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலை யில், உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து உடனடி தக வல் எதுவும் வெளியாக வில்லை.
கர்நாடகாவின் எஸ்விஎம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி நிர்வாகம், தனது கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவிகளை யும் “தி கேரளா ஸ்டோரி” பார்க்கும்படி அறிவுறுத்தி, இலவச டிக்கெட்டுகளை வழங்கியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அர சியல் கட்சியான பாகிஸ் தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்வது குறித்து ஆலோ சித்து வருவதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட் டத்தின் பல்வேறு இடங்க ளில் கள்ள சாராயம் காய்ச்சு வது, விற்பனை ஆகிய வற்றை தடுக்காத குற்றத் திற்காக கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்நாதன் உட்பட 5 பேரை பணி இடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
உலகச் செய்திகள்
தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம்(உனாசுர்) தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதன் விழா வெனிசுலா தலை நகர் காரகாசில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, “நமது மக்களுக்கு அமைதி மற்றும் நீதியைத் தரக்கூடிய வருங்காலத்தை உனாசுர் போன்ற அமைப்பால் தர முடியும். இதே போன்றதொரு நாளில்தான் நமது தலைவர் சாவேஸ் இந்த ஒன்றியத்தை உருவாக்கினார்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் நோக்கத்தில் ஈரானும், இந்தோனேசியாவும் தங்கள் சொந்த நாணயங்களைக் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைக் கையாள முடிவு செய்துள்ளன. இது குறித்த அறிவிப்பை இந்தோனேசியப் பயணம் மேற்கொண்டு வரும் ஈரானின் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி செய்தியாளர்களின் சந்திப்பின்போது வெளியிட்டார். அப்போது அவருடன் இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோவும் இருந்தார்.
ஒரு வார காலப் போர் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டாலும், இரு தரப்பிற்கும் இடையில் நடக்கும் சண்டை தொடர்கிறது என்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகள் கவலை தெரி வித்துள்ளன. சூடானின் ராணுவம் மற்றும் துணை ராணுவத் திற்கும் இடையிலான ஐந்து வார காலச் சண்டையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்ய ஒருவார கால போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.