சு.வெங்கடேசன் எம்.பி., சாடல்
மதுரை,ஜன.14- தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையன்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஊழியர்களை தேர்வு செய்வ தற்கான தேர்வு நடைபெறும் என்று அறி விப்பு வெளியிட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு கட்சி கள்,அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. பொங்கல் பண்டிகையன்று தேர்வு நடத் தக்கூடாது,வேறு தேதியில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மாநி லச் செயற்குழு உறுப்பினருமான சு.வெங்க டேசன், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் உள்பட கட்சியினர் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேர்வு தேதியை மாற்றக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி. வங்கியினுள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால் ஒன்றிய பாஜக அரசு தேர்வு தேதியை மாற்ற எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து சு.வெங்கடேசன் எம்.பி.,தனது டிவிட்டர் வலைதளத்தில் கூறி யிருப்பதாவது: தமிழர் திருநாளில் எஸ்பிஐ வங்கி முதன்மைத் தேர்வுகள் கூடாது என நேற்று (வெள்ளி) 12 மணி நேரம் காத்திருந்து போரா டினோம் . தமிழக முதல்வரும் தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால் இனிமேல் தேர்வுத்தேதியை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது ஒன்றிய நிதியமைச்சகம். 20 நாட்களுக்கு முன்பே தெரிந்தும் கய மைத்தனத்தை கடைப்பிடிக்கிறது ஒன்றிய அரசு. தமிழர் திருநாளினை தேர்வு நாளாக்கி எங்கள் கொண்டாட்டத்தை பதற்ற மாக மாற்றியிருக்கிறீர்கள். 13 ஆயிரம் தேர்வர்களும், பலநூறு அலுவலர்களும் பொங்கல் கொண்டாடா மல் தேர்வு மையம் நோக்கி அலைந்து கொண்டிருப்பர். தமிழர்களின் பண்பாட்டை யும், உரிமையையும், அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது. தமிழர் விரோத பாஜகவை தமிழ்நாடு ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.