states

தீக்கதிர் விரைவு செய்திகள்

2023 பிப்ரவரியில் 7.45 சதவிகிதமாக  அதிகரித்தது வேலையின்மை!

புதுதில்லி, மார்ச் 1 - இந்தியாவில் 2023 பிப்ர வரி மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.45 சதவிகிதம் என்ற அளவிற்கு அதிகரித்து ள்ளதாக இந்திய பொரு ளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய் வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy - CMIE) எனப்படும் சிஎம்ஐஇ,  அவ்வப்போது நாட்டில் நில வும் பொருளாதார நிலைகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.  அதன்படி பிப்ரவரி மாதம்  நாடு முழுவதும் நிலவிய வேலையின்மை, பொருளா தார நிலைகள் குறித்த புள்ளி விவரங்களை அந்நிறு வனம் தற்போது வெளி யிட்டுள்ளது.  இந்தியாவில், 2023 ஜன வரியில் 7.14 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், 2023 பிப்ரவரியில் 7.45 சதவிகிதமாக அதி கரித்துள்ளதாக தெரிவித்துள் ளது. குறிப்பாக, நகர்ப்புறங் களில் ஜனவரியில் 8.55 சத விகிதமாக இருந்த வேலை யின்மை விகிதம் பிப்ரவரி யில் 7.93 சதவிகிதமாக சற்று குறைந்திருந்தாலும், அது வே கிராமப்புறங்களில் 6.48 சதவிகிதத்தில் இருந்து 7.23 சதவிகிதமாக அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ளது.

கட்டணத்தை மீண்டும் உயர்த்த ஏர்டெல் திட்டம்

பார்சிலோனா, மார்ச் 1- இந்தியாவில் இயங்கி வரும் டெலி காம் நிறுவனங்களில் முன்னணி நிறுவன மாக உள்ளது ஏர்டெல் நிறுவனம்.  கடந்த டிசம்பரில் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.99-ல் இருந்து ரூ.155 என உயர்த்தியது. தொடர்ந்து கடந்த ஜனவரியில் நாடு முழு வதும் உள்ள பல்வேறு டெலிகாம் வட்டா ரத்தில் இதை நடைமுறைக்கு கொண்டு வந்தது.  இந்த நிலையில், பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், ‘‘டெலிகாம் துறை யில் பெரிய அளவில் மூலதன முதலீடு மேற்கொண்டுள்ளோம். இருந்தாலும் அதி லிருந்து கிடைக்கும் வருவாய் மிகவும் குறை வாக உள்ளது. அதை மாற்றவேண்டும். அதன் காரணமாக சிறிய அளவில் கட்ட ணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அநேகமாக இது நடப்பு ஆண்டின் மத்தி யில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

ஜனவரியைக் காட்டிலும் பிப்ரவரியில் குறைந்த ஜிஎஸ்டி வசூல்!

2023 பிப்ரவரி மாதத்தில் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 577 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் ஒன்றிய  அரசின் ஜிஎஸ்டி 27 ஆயிரத்து 662 கோடி; மாநில அரசின்  ஜிஎஸ்டி ரூ. 34 ஆயிரத்து 915 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.75 ஆயிரத்து 069 கோடி என வசூலாகியுள் ளது. 2023 பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூலானது, கடந்த 2022-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூலைக் காட்டிலும் 12 சதவிகிதம் அதிகம். அதேநேரம் முந்தைய  2023 ஜனவரி மாத வசூலான ரூ. 1 லட்சத்து 55 ஆயி ரத்து 922 கோடியைக் காட்டிலும் குறைவாகும். 2023 பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் 8,774 கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டைக் காட்டி லும் 19 சதவிகிதம் அதிகம்.

தேர்தல் ஆணையம் பாஜகவின் மோசடி அமைப்பாகி விட்டது

“அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாகவும், நடுநிலை யாகவும் நடப்பதுதான் தேர்தல் ஆணையம். ஆனால், இந்தியாவில் இருப்பது தேர்தல் ஆணையம் அல்ல. அது ஒரு மோசடி அமைப்பு. பாஜக-வுக்கு சாதகமான விஷ யங்களை மட்டுமே அது செய்யும். மக்களை முட்டாளாக்  கும் அமைப்பு அது. சிவசேனா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தேர்தல் ஆணையம் எப்படி தீர்ப்பு கொடுக்க முடியும்? ஒரு அமித் ஷா அல்ல.  இன்னும் ஓராயிரம் அமித் ஷா வந்தாலும் சிவசேனாவை அழிக்க முடியாது. சிவசேனா சின்னத்தை அவர்கள் திருடி யுள்ளனர். அந்த திருடர்களிடம் இருந்து அதனை நாம்  விரைவில் மீட்போம்” என்று முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

ராகுல் காந்தி இன்று லண்டனில் பேசுகிறார்

காங்கிரஸ் எம்.பி.  ராகுல் காந்தி, அவர் கல்வி பயின்ற, இங்கி லாந்து தலைநகர் லண்டனி லுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் “21-ம் நூற்றாண்டை கேட்க கற்றுக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் வியாழ னன்று சொற்பொழிவாற்று கிறார். இந்த சொற்பொழிவு மட்டுமன்றி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளி லும் பங்கேற்கிறார். இந்த  பயணத்தின் போது இங்கி லாந்துவாழ் இந்தியர்கள் மற்றும் தொழிலதிபர்களையும் ராகுல்காந்தி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெங்காயத்திற்கு விலை கேட்டுப் போராடிய எம்எல்ஏக்கள்!

மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளதால், விவசாயி களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக் கக்கோரி, தேசியவாத காங்கி ரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் வெங்  காய மாலை அணிந்து சட்டப் பேரவைக்கு சென்றனர். வெங்காய விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வெங்கா யத்துக்கு நியாயமான விலை  கிடைக்க மாநில அரசு நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி யும், தலையில் வெங்காயத்தை சுமந்த படியும், கழுத்தில் வெங் காய மாலை அணிந்தும் எம்எல்ஏக்கள் வந்தனர்.

தில்லியில் புதிய அமைச்சர்களாகும் அதிஷி, சவுரப் பரத்வாஜ்!

மோடி அரசின் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட பின்னணியில், தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அவர்களின் இடத்திற்கு அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்களை புதிய அமைச்சர்களாக நியமிக்க, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவிற்கு பரிந்துரைத்துள்ளார். இவர்கள்  இருவரும் பதவியேற்கும் நாள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று  வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை,மார்ச் 1-  சென்னை உயர்நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், “கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழ்நாடுஅரசு ரத்து செய்தது. இதையடுத்து 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி யது. மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றி தழ்களை திரும்பப் பெற்று, 9 ஆம்  வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும். சிபிஎஸ்இ மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டங்களில் பயின்றவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  அண்மையில், ரயில்வேயில் ஒரு  லட்சத்து 3 ஆயிரத்து 769, குரூப் டி  பணியிடங்களுக்கும், 40,889 தபால்  துறை பணியிடங்களுக்கும், பெங் களூரு ரயில் வீல் தொழிற்சாலையில் 4,103 அப்பரண்டிஸ் பணிகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளில் சேர, பத்தாம் வகுப்பு  மதிப்பெண்கள் அவசியம். எனவே, மதிப்பெண்ணுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி யிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி  பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறி ஞர், “ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பான வழக்கில், தேர்வுகள் நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வரத்து அதிகரிப்பு: பெரிய வெங்காயம் விலை சரிவு

சென்னை, மார்ச் 1- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தினசரி 40 லாரிகள் வரை வெங்காயம் வருவது வழக்கம். தற்போது வெங்காய சீசன் தொடங்கி பரவலாக விளைச்சல் அதிகரித்து இருப்பதால் கடந்த சில  நாட்களாகவே அதன் வரத்து அதிகரித் துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் புதனன்று (மார்ச் 1)  50 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.  இதனால் வெங்காயம் விலை  சரிந்து உள்ளது. மொத்த விற்பனை  கடைகளில் புதனன்று ஒரு கிலோ  வெங்காயம் ரூ.6 முதல் விற்கப் பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரகத்தை பொறுத்து ரூ.10  முதல் விற்கப்படுகிறது. இதேபோல் மொத்த விற்பனை கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனையானது.

போலியாக டாக்டர் பட்டம்:  புகார் அளிக்க முடிவு

சென்னை, மார்ச் 1- சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணை யம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அமைப்பு சார்பில் சில நாட்களுக்கு முன்பு அண்ணா  பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் தேவா, திரைக்கலைஞர் கோகுல், கஜராஜ், நடன இயக்குநர் சாண்டி, ஈரோடு மகேஷ், நடிகர்  வடிவேலு, யூடியூப்பில் பிரபலமான கோபி , சுதாகர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர் பட்டம்  வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த டாக்டர் பட்டத்திற்கும்,  அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக பெயரில் போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது தொடர்பாக காவல் துறையில் புகாரளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதியை  ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர். நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகையும் , அரசும் அறிவுறுத்தியுள்ளது”.இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை,மார்ச் 1- திருப்பூர் மாவட்டத்தில் கேரளாவை சேர்ந்த பெண் தனது 8 வயது மகளுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.  இவரது, மகளை பக்கத்து வீட்டில் வசித்த நபர் பாலியல் வன்புணர்வு செய்ததாக திருப்பூர்  அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் தாய் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த திருப்பூர் முதன்மை அமர்வு நீதி மன்றம், உரிய ஆதாரங்கள் இல்லை  எனக்கூறி குற்றவாளியை கடந்த 2014 ஆம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தது.  இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, விடுதலை உத்தரவை ரத்து செய்து, அந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து  தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறி யுள்ளார்.

சீனாவுடனான நட்பு தொடரும்

பெலாரஸ் அறிவிப்பு

மின்ஸ்க், மார்ச் 1- இன்னும் பல ஆண்டுகளுக்கு பெலாரசுக்கும், சீனாவுக்கும் இடையிலான நட்புறவு தொடரும் என்று பெலாரசின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகா ஷென்கோ தெரிவித்துள்ளார். சீனாவின் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட் டார். வெளிப்படையாக சில அம்சங்களைத் தனது நேர்காணலில் தெரிவித்த லுகா ஷென்கோ, ‘‘ஒரு விஷயத்தை நாம் ஒப்புக்  கொண்டே ஆக வேண்டும். மத்திய ஐரோப்பியப் பகுதியில் பெலாரஸ் மட்டும்தான் சீனாவுடன் நட்பைப் பேண  விரும்புகிறது. நேர்மறையான அணுகு முறையை நாங்கள் மட்டும்தான் கடைப் பிடிக்கிறோம்’’ என்றார். இரு நாடுகளும் பரந்து விரிந்த நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளன என்று கூறிய அவர், ‘‘இந்த நட்புறவு மேலும்  பல ஆண்டுகளுக்குத் தொடரும். லுகா ஷென்கோ என்னும் நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் மட்டுமில்லாமல், அதன்பிறகும் இந்த நட்பு தொடரும். இரு நாட்டு மக்களிடையே ஆழமான உறவு ஏற்பட்டுள்ளதால், வரக்கூடிய  ஜனாதிபதிகளும் இதைத்தொடர்வார் கள்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில், பெலாரசில் முதலீடுகளை மேற்கொண்டு, திட்டங்களை நிறைவேற்று மாறு சீன நிறுவனங்களை லுகாஷென்கோ கேட்டுக் கொண்டார். பல நாடுகளை இணைக்கும் சீனாவின் வர்த்தகத் திட்டத்திற்கு முழு ஆதரவைத் தந்துள்ள பெலாரஸ், அதுகுறித்துக் கூடுதலான ஒத்துழைப்பைத் தரப்போகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறினால் பெலாரஸ் பெரிய அளவில் பலன் அடையும் என்று செய்தியாளர்களிடம் லுகாஷென்கோ தெரிவித்தார்.

ஊழியர்கள் பணிநீக்கம் எதிரொலி?  முடங்கிய ட்விட்டர் சேவை

சான்பிரான்சிஸ்கோ, மார்ச் 1-  கடந்த அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் எலான் மஸ்க். அப்போது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் ட்விட்டர் தளத்தில் மேற்கொண்டு வருகிறார். அதில் ஆட்குறைப்பு நடவடிக்கை யும் அடங்கும்.  அதே நேரத்தில் அண்மை காலமாக ட்விட்டர் தள சேவைகள் முடக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக நிரந்தர தீர்வை காண தனது குழுவின ருடன் பணி செய்து வருவதாக மஸ்க் தெரி வித்திருந்தார். ஆனாலும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், புதனன்று உலக அளவில் ட்விட்டர் சேவைகள் முடங்கி யுள்ளன. இது தொடர்பாக முடங்கப்பட்ட தளங்கள் குறித்த தகவலை வெளியிடும் ‘டவுன்டிட்டக்டர்’ தளத்தில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். செயலி, வலைதளம் மற்றும் சர்வர் இணைப்பில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். ட்விட்டர் தளத்தில் இணைப்பில் உள்ளவர்களின் ட்வீட்கள் மற்றும் டைம்லைனை பார்க்க முடியவில்லை என  சில பயனர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரெண்டிங் ஹேஷ்டேகுகளை பார்க்கவும், புதிய ட்வீட்களை பதியவும் முடிவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் ட்விட்டர் தள சேவைகள் முடங்கியுள்ளதை #Twitterdown என பயனர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.