‘முதலில் கொரோனா விதிகளை அறிவியுங்கள்!’
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இயலாவிட்டால் பொது சுகா தாரம் கருதி பயணத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. “ராகுல் காந்திக்கு மட்டும் இவ்வாறு கடிதம் எழுதுவது ஏன்? ராஜஸ்தா னில் பாஜக தலைவர் சதிஷ் புனியா மேற்கொண்டு வரும், மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்பப்பட்டதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார். “முதலில் விதிகளை அறிவியுங்கள். பிறகு நாங்கள் அவற்றை பின்பற்றுகிறோம்” என்றும் காட்டமாக கூறியுள்ளார்.
எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்?
எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், “அதிமுக இடைக் கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த அதிமுகவின் வரவு- செலவு கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் ஏற்காமல் இருப்பது” முக்கிய விஷயமாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இதனிடையே, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் அதிமுகவின் வரவு - செலவுக் கணக்கு விவரங்களை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்று தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும், இது ஒ.பி.எஸ். தரப்புக்கு பின்னடைவு என்றும் கருத்து எழுந்துள்ளது.
தற்போதைய சித்தாந்த மோதல் பழமையானது!
நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே மோதல் நடக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மோதல் புதியதோ அல்லது 21-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததோ இல்லை. இந்த மோதல் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஒரு சித்தாந்தம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பலன்களை அளிப்பது. மற்றொன்று எளியவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் குரல்களை உயர்த்துவது. இந்த மோதல் நடந்து கொண்டே இருக்கும். ஆனால் இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பணி இருக்கிறது. நம் அனைவருக்கும் ஒரு பணி இருக்கிறது. அதற்காகத்தான் நான் இந்த ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன்” என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ஹரியானாவில் பேசியுள்ளார்.
‘சீனாவைப் போல கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்’
“இந்தியாவுக்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்களும் கர்நாடகாவுக்குள் நுழைவோம். அதற்கு எங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நாங்கள் இந்தப் பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கவே விரும்பினோம். ஆனால், கர்நாடக முதல்வர் நெருப்பை பற்றவைத்துள்ளார். மகாராஷ்டிராவில் பலவீனமான அரசாங்கம் உள்ளது. இது குறித்து அவர்களால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசியுள்ளார். கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சனை நிலவி வரும் நிலையிலேயே சஞ்சய் ராவத் இவ்வாறு கூறியுள்ளார்.
‘விளம்பர செலவு விவகாரத்தைக் கேட்க அதிகாரமில்லை’
தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, விளம்பரத்திற்காக செலவிட்ட 97 கோடி ரூபாய் பொது நிதியை, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து வசூலிக்க தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார். இதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் பதிலளித்துள் ளார். “பாஜக ஆட்சியில் உள்ள மாநில அரசுகள் அளித்த விளம்பரங்கள் தில்லியில் வெளி யிடப்பட்டு உள்ளன. விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட 22 ஆயிரம் கோடி ரூபாயை எப்போது அவர்களிடம் இருந்து வசூலிக்கப் போகிறீர்கள்? அவர்கள் பணத்தை கொடுத்தால் நாங்களும் 97 கோடி ரூபாயை தருகிறோம். இதில் உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோயில் டிக்கெட் விற்பனை முறைகேடு: இருவர் இடைநீக்கம்
சென்னை,டிச.21- வடபழனி முருகன்கோவில் டிக்கெட் விற்பனை முறைகேடு தொடர்பாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் புதனன்று (டிச.21) செய்தியாளர்களிடம் பேசிய அவர் வடபழனி முருகன் கோயிலில் நீதிபதி ஒருவர் தரிசனம் செய்ய சென்றபோது, பணியிலிருந்த அறநிலையத் துறை அலுவலர்கள் டிக்கெட் விற்பனையில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில், அந்தப் புகார் தொடர்பாக அறநிலையத் துறை அலுவலர்கள் ரேவதி, ரவி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மீஞ்சூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். “திமுக ஆட்சிக்கு வந்தபின் 38 மாவட்ட குழுக்கள் கோயில்களில் அறங்காவலர் நியமிக்கப்பட வேண்டி யிருந்தது. இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவந்து 16 கோயில்க ளில் அறங்காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும், 2000-க்கும் மேற்பட்ட கோயில்களில் அறங்காவலர் களை நியமிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது”என்றும் அவர் தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது ? அமைச்சர் விளக்கம்
சென்னை,டிச.21- கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை பதிவாளர்கள், கூடுதல் பதிவா ளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிக ளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் ெஜ.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரி களும் கலந்து கொண்டனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “33571 நியாய விலைக் கடைகளில் அரசு மூலம் வழங்கப்படும் பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது”என்றார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு வது குறித்து முதலமைச்சர் தலை மையில் ஆலோசனை நடைபெற்றுள் ளது. அதுபற்றிய முடிவை விரைவில் அறிவிப்பார். இந்த அறிவிப்பு வந்ததும் எங்களது துறை செயல் படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயமானவர் மாரடைப்பில் மரணம்
சென்னை,டிச.21- திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி ஆலோசனைக் குழுத் தலைவரும், தொழில் அதி பருமான சேகர்ரெட்டி மகளுக்கும், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான தர்மா மகன் சந்திர மவுலிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. வருகிற ஜனவரி 26 ஆம் தேதி இவர்களது திருமணத்தை ஆந்திர முதலமைச்சர் ெஜகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாக அறிவிக் கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மண மகன் சந்திரமவுலிக்கு டிச. 18 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடி யாக ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதனன்று(டிச.21) மரணமடைந்தார்.
மக்கள் செல்வாக்கை இழக்கும் அதிமுக: ஓபிஎஸ் ஆதங்கம்
சென்னை,டிச.21- அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரியில் புதனன்று (டிச.21) கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், 88 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், “ தமிழ் நாட்டில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு இயக்கம், மனிதாபிமானம்கூட இல்லாமல், சர்வாதிகார நிலையின் உச்சத்திலே நின்றுகொண்டு, நான் செய்வதுதான், கட்சியின் சட்டவிதி என்ற நிலையை அதிமுகவில் கொண்டுவர முயற்சி செய்து, இன்றைக்கு அது தோற்றுபோய் கட்சித் தொண்டர்கள், பொதுமக்களின் செல்வாக்கை இழக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது”என்றார். கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்ற தீர்மா னத்தை ரத்து செய்தவர்களை எந்த நிலையிலும் எந்த காலக் கட்டத்திலும் மன்னிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
சாந்தனிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை,டிச.21- ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் இலங்கை பாஸ்போர்ட்டைத் திருப்பி வழங்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், அதை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்த வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் சாந்தன் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்து கடந்த நவம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, நீதிமன்றத்தில் உள்ள தனது பாஸ்போர்ட் 1995 ஆம் ஆண்டு காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிப்பதற்காக, திரும்பத் தரக் கோரி சாந்தன் தரப்பில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி தங்க மாரியப்பன் முன்பு புதனன்று (டிச.21) விசாரணைக்கு வந்தது. திருச்சி முகாமிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாந்தன் அழைத்து வரப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, சாந்தனின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை சரிபார்த்த பின், பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார். அதேசமயம் நீதிமன்றத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பாஸ்போர்ட்டை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவைத் தொடர்ந்து சாந்தனின் பாஸ்போர்ட் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப் பட்டது.
ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
தமிழ்நாட்டில், முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.