உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் டிராக் டர் கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு எதி ராக சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் கருத்து பரப்பிய 8 பாஜக நிர்வாகிகளுக்கு அம் மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தின் மோதி ஹாரி பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தனர். ஆபத் தான நிலையில் 12-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உய ரும் அபாயம் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள் ளன. கள்ளச்சாராயம் காய்ச்சி யது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய அனுமதி இல்லா மல் பி.எட் படிப்பு சேர்க்கை நடத்திய விருதுநகர் கலசலிங்கம் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட் டுள்ளது. மாணவர்களி டம் மனசாட்சியே இல்லா மல் வசூல் செய்து, ஏமா றும் மாணவர்கள் மூலம் தனது வங்கிக் கணக்கை செழிப்பாக்கி வைத்துள் ளது கலசலிங்கம் கல்வி நிறுவனம். பாதிக்கப்பட்ட 100 மாணவர்களும் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
உலகச் செய்திகள்
கூட்டமொன்றில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு குண்டு வெடித்தது. அது புகையைக் கிளப்பும் குண்டு என்பதால் அவருக்கும், கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை. ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள சைகாசாகி என்ற இடத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தவுடன், பிரதமரின் பாதுகாவலர்கள் அவரைப் பத்திரமாக அழைத்துச் சென்றனர். குண்டை வீசியவரையும் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர். தங்கள் தலைக்கு மேல் ஏதோ பறப்பது போல் தெரிந்தவுடன், நம்ப முடியாத வேகத்தில் நாங்கள் ஓடத் தொடங்கினோம் என்று கூட்டத்தில் பங்கேற்ற ஆளுங்கட்சி ஆதரவாளர்களில் சிலர் தெரிவித்தனர். கட்சி நிர்வாகிகள் இந்த சம்பவம் குறித்து எதுவும் சொல்ல முடியாது என்றனர்.
ஜப்பானில் நீண்ட காலமாக பிரதமராகப் பொறுப்பு வகித்த சின்சோ அபே, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சா ரத்தின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது. இதனால், தற்போது பிரதமர் கூட்டத்தில் குண்டு எறிந்த சம்பவம் அந்நாட்டு மக்களைக் கூடுதல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்த மாதத்தில் ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் ஜப்பானில் நடக்கவுள்ளது.