கோவை, மார்ச் 18- கோவை மாநகர காவல் துறையில் பெண் காவல் ஆய்வாளர் தனது பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசி மன உளைச்ச லுக்கு உள்ளாக்குவதாகவும் தனது வேலை யை ராஜினாமா செய்யப் போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா காவல் ஆணையர் அலு வலகத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர காவல் துறையில் பணி புரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமி ழகத்தின் இரண்டாவது திருநங்கை காவல ரான இவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில், அவர் கோவைக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மாற்றப்பட்டார். கோவை மாநகர காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திருநங்கை காவலர் நஸ்ரியா சனிக்கிழமையன்று ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்திற்கு வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது காவல்துறையில் பணியில் சேர்ந்த தில் இருந்து , பல்வேறு அத்துமீறல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இந் நிலையில் தற்பொழுது தங்களது பிரிவில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை என்பவர் தனது பாலினம் குறித்தும், ஜாதி குறித்தும் இழிவாக பேசுவதாகவும், மனரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே தன்னால் இனி காவல்துறையில் பணியில் இருக்க முடியாது எனவும், தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாக வும், அந்த கடிதத்தை கொடுக்கவே காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக வும் தெரிவித்தார். இதனையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் நஸ்ரியாவை அழைத்து மாந கர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசா ரணை நடத்தினார். அப்போது திருநங்கை காவலர் நஸ்ரியா சொல்லும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ராஜி னாமா செய்யும் முடிவை கைவிட்டு , புகாரை எழுத்துப் பூர்வமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி னார். இதனையடுத்து, திருநங்கை காவலர் நஸ்ரியா தனது ராஜினாமா எழுத்துப் பூர்வ மான புகார் அளித்தார். இதனிடையே திரு நங்கை காவலர் நஸ்ரியா அளித்துள்ள புகார் குறித்து துணை ஆணையர் சந்தீஸ் விசா ரிப்பார் எனவும், ஏற்கனவே திருநங்கை காவ லர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும் அவர் தற்போது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.