ஏதென்ஸ், அக்.7- அரசின் வலதுசாரிக் கொள்கை களுக்கு எதிராக ஐரோப்பிய நாடான கிரீசில் அனைத்துத் தொழிற்சங்கங் களும் கடுமையான எதிர்ப்பு தெரி வித்துள்ளன. மக்களை நெருக்கடியில் தள்ளும் வலதுசாரிக் கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 9 ஆம் தேதியன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தைச் செய்ய அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. கிரீசின் தலைநகர் ஏதென்சில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. நவம்பர் 9 ஆம் தேதி யன்று வேலை நிறுத்தம் செய்வது என்ற முடிவை இந்தக் கூட்டத்தில் எடுத்திருக்கிறார்கள். “இனி காத்திருக்கப் போவ தில்லை, சகித்துக் கொள்ள முடியாது, நவம்பர் 9 அன்று வேலைநிறுத்தத்தில் அனைவரையும் இணைப்போம்” என்ற முழக்கங்களுடன் அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் வர வேற்றனர். கிரீசின் நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற் றன. நவம்பர் 9 ஆம் தேதி நடத்தப் படும் வேலை நிறுத்தத்திற்கு ஆதர வாக பெரிய, பெரிய கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். நெருக்கடி அதிகரித்ததால் பல்வேறு புதிய சங்கங்களும் உரு வாக்கப்பட்டன. ஏற்கனவே தொழி லாளர்கள் மத்தியில் இயங்கி வந்த தொழிற்சங்கங்களுடன், புதிய சங்கங் களும் இந்த வேலைநிறுத்த அறி விப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டன. இதில் கிரேக்கப்பாடகர் களின் தேசிய சங்கமும் ஒன்றாகும். அதன் தலைவரான நடாஷா பாபி லியோ இந்தக் கூட்டத்தில் பங்கேற் றார். வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்கத் தயாரா யிருப்பதையே இது காட்டுவதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.