மதுரை, மார்ச் 26- இலக்கியத்தில் சொல்லப்படுகிற மதுரை யை துல்லியமாக அறிந்துகொள்ள நகரத்திற் குள் அகழாய்வு நடத்தப்பட வேண்டும் என்று வைகை இலக்கியத் திருவிழாவில் சு.வெங்க டேசன் எம்.பி.பேசினார். மதுரையில் வைகை இலக்கியத் திருவிழா மார்ச் 26 ஞாயிறன்று உலகத் தமிழ்ச்சங்கத்தில் துவங்கியது.
பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வரவேற்றார். தமிழக நிதியமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் விழாப் பேருரையாற்றினர். மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையா ளர் சிம்ரன்ஜீத் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன் , பொது நூலக இயக்குநர் இளம்பகவத், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன் மற்றும் தமிழ் ஆர்வ லர்கள், கல்லூரி மாணவர்,மாணவிகள் கலந்து கொண்டனர். கூடுதல் ஆட்சியர் சரவணன் நன்றி கூறினார். விழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பின ரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தா ளருமான சு.வெங்கடேசன் “ மதுரையும் எழுத் தும்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.
எழுத்துக்களின் தலைநகரம்
அவர் பேசியதாவது: மதுரை எழுத்துக்களின் தலைநகரமாகும். சாகித்ய அகாடமி விருதுபெற்ற விழாவில் நான் ஏற்புரையாற்றியபோது, நான் எழுத்துக்களின் தலைநகரத்திலிருந்து வருகிறேன் என்று கூறி னேன். ஏனென்றால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்கள் 16 இடங்களில் இருக்கிற உலகத்தின் ஒரே நகரம் மதுரை என்பதுதான் மதுரையின் பெருமை. உலகில் வேறு எந்த நக ரத்திற்கும் இந்த பெருமை கிடையாது. மதுரை யில் உள்ள எண்பெருங்குன்றங்கள், தமிழி கல்வெட்டுக்கள் ஆகியவற்றை யுனெஸ்கோ வின் பாரம்பரிய சின்னமாக்கி பாதுகாக்க வேண்டும் என்று பேராசிரியர் வேதாச்சலம் கோரிக்கை விடுத்தார்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனவுடன் செய்த முதல் வேலை அதுதான். யுனெஸ்கோவிற்கு நேரடி யாக கோரிக்கை வைக்க முடியாது.இந்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம்தான் இதற்கான கோரிக்கையை யுனெஸ்கோவிற்கு தெரிவிக்க வேண்டும். எனவே ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து இதற்காக கோரிக்கை விடுத்தேன். இப்போதும் அதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். மதுரை நகரத்தின் தொல்லியல் ஆதாரமும் சரி, இலக்கிய ஆதாரமும் சரி , புராணக்கதை களும் சரி, எல்லாமே இந்த நகரத்திற்கும் எழுத்துக்கும் உள்ள உறவு, எழுத்தின் ஆதியிலிருந்து எழுத்துக்கு மதுரை நகரம் கொடுத்து வந்துள்ள முக்கியத்துவத்தை உண்மையை அறிந்துகொள்ளலாம். இந்தி யாவின் எந்த இலக்கியத்திலும் இறைவன் தன்னை ஒரு நல்ல கவிஞனாக ஏற்றுக்கொள் ளுங்கள் என்று கேட்ட கதை கிடையாது. நான் எழுதியது நல்ல பாட்டுதான், இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சபையில் நின்று சிவ பெருமான் கேட்கிற நகரம் மதுரைதான். இறை வனா,மனிதனா? சிறியவனா, பெரியவனா? என்பது பிரச்சனையில்லை, எழுதியது சரியா, தப்பா என்று மட்டும்தான் பார்ப்பேன் என சொன்னவர்கள் வாழ்ந்த நகரம் மதுரை. இதை அறிவுத்துறையில் தாட்சண்யத்திற்கு இடமில்லை என்று சொல்வார்கள். இது திருவிளையாடல் புராணக்கதை. மதுரையின் சிறப்பை சொல்லக்கூடிய கதை.
சங்கப் புலவர் சன்னதி
சமயம் சாராத சங்க இலக்கியப் புலவர் களுக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவி லில்தான் சங்கப்புலவர் சன்னதி உள்ளது. தெய்வம் கைவிட்டாலும் முயற்சி உன்னை கைவிடாது என்று பகுத்தறிவாகச் சொன்ன திருவள்ளுவருக்கு சிலை உள்ளது. புலவர் மோசிகீரனாருக்கு சிலை உள்ளது. தமிழ் இலக்கியத்தில் அதிகளவில் வரலாற்றுக் குறிப்புகளை எழுதிய சங்கப் புலவர்கள் பர ணர், மாமூலனார் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன. பெண் புலவர் வெள்ளிவீதியாருக்கு சிலை உள்ளது.இது புலமை மரபின் தொடர்ச்சிக்கு இந்த மண் கொடுத்துள்ள முக்கி யத்துவம் ஆகும்.அறிவுமரபின் தொடர்ச்சி யை, எழுத்து மரபின் தொடர்ச்சியை இவை கள் பேசுகின்றன.400-க்கும் மேற்பட்ட தமிழ்ப் புலவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புலவர்கள் மதுரையைச் சார்ந்தவர்கள். மதுரை தேனூ ரில் தமிழி எழுத்து எழுதப்பட்ட தங்கக்கட்டி கிடைத்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 78 கல்வெட்டுக்களில் 77 கல் வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்தான்.மக் கள் எழுதிய தமிழ் எழுத்துக்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான பானை ஓடுகள் கிடைத் துள்ளன. இது அந்தக்கால மக்களின் கல்வி யறிவை வெளிக்காட்டுகின்றன.மதுரையில் எங்கு தோண்டினாலும் 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட பானை ஓடுகள் கிடைக்கும். 6 மாதங்களுக்கு முன்பு மதுரை கீரைத்துறை மின்மயானத்தில் மழைநீர் சேகரிப்புக்காக தொட்டி அமைக்க தோண்டப்பட்டபோது, 15 அடி ஆழத்தில் உறைகிணறு இருப்பது கண்ட றியப்பட்டது.
மதுரை மாநகரில்...
மதுரை நகரத்திற்குள் அகழாய்வு நடத்தப் படாத குறை உள்ளது. அகழாய்வு நடத்த கீழடி அமர்நாத் ராமகிருஷ்ணன் குழுவினரு டன் இணைந்து பெரும் முயற்சி செய்தோம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே கார் பார்க்கிங் பகுதியில் ஒரு சிறிய இடம் தாருங்கள் என்று கடந்த அதிமுக அரசிடம் கேட்டோம். ஆனால் இடம் கிடைக்கவில்லை. மதுரை நகரத்திற்குள் அகழாய்வு நிச்சயம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மது ரையின் வரலாற்றை, மதுரையின் கதையை, இலக்கியத்தில் சொல்லப்படுகிற மதுரைக் கான உறவை துல்லியமாக தெரிந்துகொள்ள உதவும்.அதற்கான முயற்சியை தொடர்ந்து செய்வோம். இந்தியாவிலே மிகப்பழமை யான எழுத்துக்களை உடைய மொழி தமிழ். இது நமக்கு பெருமை. அந்த தமிழ் எழுத்துக் களை திசையெங்கும் விரித்து வைத்திருக்கிற நதி வைகை நதி. அந்த வைகை நதியோரத்தில் உள்ள மதுரைதான் உலகத்திலே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்களை 16 இடங்களில் கொண்டுள்ள நகரம். அத னால்தான் மதுரை எழுத்துக்களின் தலைநக ரம்,ஆதி நகரம், எழுத்து சூழ் மதுரை. இவ்வாறு அவர் பேசினார்.