திருநீலகண்டப் பிள்ளையார் தீர்த்தவாரி திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இக்கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கி.பி. 1825 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின் அமைச்சரது தீராத நீரிழிவு நோயை தீர்த்து வைத்த பெருமைக்குரியது எனப் போற்றப்படுகிறது திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம். துளசேந்திர மகாராஜா இந்தக் கோவிலுக்கான நிலத்தில் தானமாக எழுதிக் கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது. சிறிய கூரைக் கொட்டகையில் இருந்த நீலகண்டப் பிள்ளையாருக்கு கோவிலையும் அவர் கட்டிக் கொடுத்ததாக அந்த வரலாறு குறிப்பிடுகிறது. இந்தக் கோயில் தற்போது பலரின் முயற்சியால் சிறிது சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு விமானம், சிறிய ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு கடந்த 2000 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்னர் 2014 ஆம் ஆண்டு உபயதாரர்கள் மூலம் இரண்டு பெரிய முன்மண்டபங்களுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பெரிய கோயிலாக அமைக்கப்பட்டு திருக்குடமுழுக்கு நடைபெற்றது. கோவிலுக்கு வடபுறத்தில் தீர்த்தக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடி நீலகண்டப் பிள்ளையாரை வணங்கினால் தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம். ஆதலால் இந்தப் பிள்ளையாருக்கு “தீராத வினை தீர்க்கும் திருநீலகண்டப் பிள்ளையார்” என்ற சிறப்பு பெயரும் உள்ளது. தீர்த்தவாரி திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பேராவூரணியில் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்கள் எளிதில் வந்து செல்ல போக்குவரத்து வசதிகளும் இதர வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அஞ்சலக கணக்கு தொடங்க அறிவுறுத்தல்
தஞ்சாவூர், மே 3- தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் கல்வி யாண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கல்வி உதவித் தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்கள் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் அருகிலுள்ள அஞ்சல கம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் சாத னத்தின் மூலம் தங்களின் ஆதார், கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு தொடங்கிப் பயனடையலாம். என தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியா் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக போராடுவோம்!
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேட்டி
ஜம்மு, மே 3 - 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை ஒன்றுபட்டு எதிர்ப்பது குறித்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவையும் நேரில் சந்தித்து உரையாடினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து, பரூக் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி ஒற்றுமையை உருவாக்கிட முயற்சிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள், நல்ல உணர்வு மேலோங்கும் என்று நம்புகிறோம். காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூட நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை எதிர்கொள்ள எதிர்க்கட்சி ஒற்றுமை ஏற்பட வேண்டும் என கூறியுள்ளார். இதனை எதிர்க்கட்சிகளும் உணர்வார்கள் என நம்புகிறேன். ஜனநாயகத்தை பாதுகாக்க இணைந்து பாடுபடுவோம். 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்வதன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் என்றார்கள். ஆனால், அண்மையில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு குடும்பம் இல்லையா? குண்டு துளைக்காத வாகனத்தில் அனுப்பப்பட்டார்கள். ஆனால் என்ன நடந்தது? இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் பாஜக மக்களின் உரிமையை மறுக்கிறது. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டது. காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று கவலை இல்லை. அதை எப்போது நடத்துவது என அவர்களே (பாஜக) முடிவு செய்யட்டும். குறைந்தபட்சம் பஞ்சாயத்து தேர்தலாவது நடக்கும் என நினைக்கிறேன். தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் போட்டியிட தேசிய மாநாட்டு கட்சி தயாராக உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக-வை எதிர்த்துப் போராடுவோம். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்புடன் நீர் நிலைகளில் குளிக்க வேண்டும்
புதுக்கோட்டை, மே 3- புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உள்ளது. தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில் ஏரி மற்றும் குளங்களில் நீரின் அளவு அதிக ரித்து வருகிறது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலை யில், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் குளம், ஏரி மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் அதன் ஆழம் மற்றும் சுழல் தன்மை அறியாமல் குளிக்கச் சென்று விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்களது மேற்பார்வையில் தங்களது குழந்தைகளை தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் நீர் நிலைகளில் குளிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விடுமுறை காலத்தில் வெளியூரிலிருந்து வரு பவர்கள் அருகிலுள்ள ஏரி, குளங்களின் ஆழம் மற்றும் ஆபத்து அறியாமல் இறங்குவதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, மே 3- திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, வசிப்பிடமின்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களுர் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள பேஸ்-II-இல் வீடுகள் வழங்கப்பட உள்ளதால் தகுதியான திருநங்கை பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய விண்ணப்பப் படிவத்தினை திருச்சி மாவட்ட சமூகநலஅலுவலகத்தில் நேரில் பெற்று மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,திருச்சி. என்ற முகவரியில் 6.5.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2413796 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
சீட்டுப் பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்
திருச்சிராப்பள்ளி, மே 3- திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பெரியார் தெரு பகுதி யில் ஒரு தனியார் சீட்டுக் கம்பெனி செயல்பட்டு வந்தது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் நிலோபர், திருச்சி உடையான் பட்டி மெயின் ரோடு ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாபர் அலி மஸ்ஜித் ஆகிய நான்கு பேர் நடத்தி வந்தனர். இதில் காந்திநகர் எம்ஜிஆர் தெரு பகுதியைச் சேர்ந்த சின்னய்யா மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரைச் சார்ந்த 35 பேர் சேர்ந்து ரூ.36 லட்சத்து 1275 செலுத்தி இருந்தனர். இந்நிலையில் திடீரென பாபர்அலி மும்தாஜ்க்கு சொந்தமான சீட்டுக் கம்பெனி அலுவலகத்தை காலி செய்யும் தகவல் வெளியானது. இதனை கேள்விப்பட்டு விஜயலட்சுமி அங்கு சென்றார். பின்னர் அவர் தான் செலுத்திய சீட்டுப் பணத்துக்கு பதில் சொல்லுங்கள் என கூறியுள்ளார். அப்போது பாபர்அலி உட்பட நான்கு பேரும் சீட்டுப் பணத்தை தர முடியாது எனக்கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப் பட்ட விஜயலட்சுமி ஏர்போர்ட் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம்: காதலன் உள்பட 7 பேர் மீது வழக்கு
திருச்சிராப்பள்ளி, மே 3- திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக தெரிய வருகிறது. இதையடுத்து இருவரும் சம்பவத்தன்று தனியாக வெளியே சென்று உள்ளனர். அப்பொழுது காதலன் அந்த 17 வயது சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. மேலும் அந்த சிறுமியின் காதலனுக்கு அவருடைய நண்பர்கள் 6 பேர் உடந்தையாக இருந்து உள்ளனர். அவர்களும் இந்த சிறு மிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்த காதலன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவராக விண்ணப்பிக்கலாம்
ஆட்சியர் அறிவிப்பு
திருவாரூர், மே 3- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் திருவாரூர் மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை முகவர் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இத்திட்டத்தில், 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முக வராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட் கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முக வராக வயது வரம்பு 18 முதல் 65 வய திற்குள்ளாக இருக்க வேண்டும்.திட்டத் தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிக பட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும். இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www. tahdco.com என்ற இணையதள முகவரி யில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலா ளர் அலுவலகம், அரசு ஆதிதிராவிடர் மாண வர் விடுதி எதிரில், நாகை பைபாஸ் ரோடு, திருவாரூர் என்ற முகவரியிலும், 04366- 250017 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்’’ என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவு
ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களின் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார். சூதாட்டம் சட்டவிரோத மானது என்பதால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஊடகங்கள் அது தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள் விளம்பரம் செய்ய துவங்கி இருப்பதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வார்த்தைகளில் சுய கட்டுப்பாடு: தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!
“கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தரம் தாழ்ந்த முறை யில் விமர்சனங்கள் வைக்கப்படுவதை தீவிர கவனத்தில் கொண்டுள்ளோம். முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நட்சத்திர பேச்சா ளர் அந்தஸ்து பெற்றவர்கள் அப்படி பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான புகார்களும், எதிர் புகார்களும் ஊடகங்களில் எதிர்மறையான கவனத்தை பெற்றுள்ளன. ஆகவே, அரசியல் கட்சிகளும், நட்சத்திர பேச்சாளர்களும் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் கவன மாக செயல்பட வேண்டும். வார்த்தைகளில் சுயகட்டுப் பாட்டை கடைபிடிக்க வேண்டும். சுமூகமான தேர்தல் சூழ்நிலையை சீர்குலைத்துவிடக்கூடாது” என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலை மீது குற்றவியல் வழக்கு: டி.ஆர்.பாலு
சென்னை, மே 2- சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறுகையில், “தமிழ்நாடு பாஜகத் தலைவர் அண்ணாமலை என் மீது அவதூறு பரப்பும் வகையில் சொத்து சேர்த்த தாக கூறியுள்ளார். 21 கம்பெனிகள் என்னுடையது என்று கூறியிருக்கிறார். அதில் 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளேன். எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடை யாது. எந்த கம்பெனியிலும் நான் இயக்குநராகவும் கிடையாது” என்றார். நான் தேர்தலில் நிற்கும் போதே எனது சொத்து விவரங்களை தெரி வித்துள்ளேன். என் மீது அவதூறு பரப்பிய அண்ணாமலைக்கு வழக்கறி ஞர் மூலம் நோட்டீசு அனுப்பி யுள்ளேன். அவரை சும்மா விடமாட் டேன். வருகிற 8 ஆம் தேதி அண்ணா மலை மீது குற்றவியல் வழக்கு தொடரு வேன் என்றும் அவர் கூறினார்.
96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்
சென்னை, மே 3- தமிழ்நாட்டில் “டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சென்னை திருமங்கலத்திலுள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப் பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி புதனன்று(மே 3) ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ் மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தானி யங்கி கடையை பொறுத்தவரையில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான் செயல்படுகிறது. டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும்தான் இயங்கும். இதனை 24 மணி நேரம் பயன்படுத்தலாம், கடைக்கு வெளியே உள்ளது. ஏடிஎம் எந்திரத்தை உடைத்து எடுப்பது போல் இதனை உடைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் தவறான செய்தியைப் பரப்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆருத்ரா நிர்வாகி சுரேஷ் வங்கிக் கணக்கு முடக்கம்
சென்னை,மே 3- சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல் பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 விழுக் காடு வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொரு ளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஐயப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, நடத்தப் பட்ட விசாரணையில் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அதேபோல் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மீட்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக ஒபிசி பிரிவு துணைத் தலைவருமான ஆர்.கே.சுரேஷூக்கும் தொடர்பிருப் பது தெரியவந்தது. அதனடிப்படை யில் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ஆர்.கே.சுரேஷின் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பிறகும் காவல்துறையில் ஆஜரா காமல் ஆர். கே சுரேஷ் தலைமறை வாக இருந்து வரும் நிலையில், ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு போலீசார் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இருப்பி னும் அவர் நேரில் வராமல் தலைமறை வாக உள்ள நிலையில், தற்போது குற்றப்பிரிவு போலீசார் அவரது வங்கிக் கணக்குகளை முடக்கி அவருக்கு செக் வைத்துள்ளனர். ஆருத்ரா மோசடி புகாரில் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளதால் அவரின் கணக்கு முடக் கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.
உள்ளூர் மக்களுக்கே இயற்கை வள லாபம்
மெக்சிகோவில் அதிரடி
மெக்சிகோவில் அதிரடி மெக்சிகோ சிட்டி, மே 3- மெக்சிகோவின் இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கும் லாபத்தை உள்ளூர் சமூக மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய மெக்சிகோவின் இடதுசாரி அரசு முடிவு செய்திருக்கிறது. மெக்சிகோவில் சுரங்கங்களில் தாதுப் பொருட்களை வெட்டி எடுத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. இந்த லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டது. தனது தேர்தல் அறிக்கையிலும், மெக்சிகோவின் ஜனாதிபதி அம்லோ வாக்குறுதியாகவும் அளித்திருந்தார். இந்நிலையில் சுரங்க சீர்திருத்தச் சட்டம் மெக்சிகோவின் நாடாளுமன்ற செனட் அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சுரங்கத்தில் இயற்கை வளங்களை எடுப்பதற்கான கால அளவை 50 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாகக் குறைப்பது, லாபத்தில் 5 விழுக்காடு லாபத்தை உள்ளூர் மக்களுக்கு அளிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. லாபத்தில் பங்கு என்பது 10 விழுக்காடாக இருக்கலாம் என்று ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும், 5 விழுக்காடு என்றே நிறைவேற்றப்பட்ட மசோதாவில் உள்ளது. வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறி, கூட்டத்தைப் புறக்கணித்தனர். இந்த சுரங்க சீர்திருத்த மசோதாவில் ஆய்வு தொடர்பான அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை தர வேண்டும், இடங்களைக் கண்டறிய வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்களும் இதில் உள்ளன.
மாணவர், வாலிபர் சங்க ஊழியர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்
ரமேஷ் சென்னிதலா பேச்சு
காஞ்ஞங்காடு, மே 3 மாணவர்-இளைஞர் அமைப்பு நட வடிக்கைகளை எவ்வாறு ஒழுங்கமைப் பது என்பதை இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா குறிப்பிட்டார். காஞ்ஞங்காடு இளைஞர் காங்கிர ஸின் மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றுகையில் இதை அவர் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், கே எஸ் யூ-வை மறுசீரமைக்க முடியவில்லை. கே. எஸ்.யூ வளாகத்தில் மறைந்துவிட்டது. கோவிட்-19 காலகட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செய்த பணிகளும், மருத்துவமனையை மைய மாக வைத்து உணவுப் பொட்டலங்கள் விநியோகமும் பொது மக்களிடம் வர வேற்பைப் பெற்றது என சென்னிதலா கூறினார். அப்போது இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பி.பி.பிரதீப் குமார் குறுக்கிட்டார். கூட்டத்தில் பத்திரி கையாளர்கள் அமர்ந்திருப்பதை உணர்ந்த சென்னிதலா தனது பேச்சை மாற்றினார்.
கர்நாடகத்தில் இடஒதுக்கீடு வரம்பு 75 சதவிகிதமாக உயர்த்தப்படும்!
தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி
பெங்களூரு, மே 3 - கர்நாடக மாநிலத்தில் இடஒதுக்கீ ட்டு வரம்பானது, 50 சதவிகிதத்தி லிருந்து 75 சதவிகிதமாக உயர்த்தப் படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது. “பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், லிங்காயத்துகள், ஒக்கலிகர் உள்ளிட்ட சமூகங்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவிகிதத்தி லிருந்து 75 சதவிகிதமாக உயர்த்தப்படும். இதில், பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 15 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாகவும், பழங்குடியினர் இடஒதுக்கீடு 3 சதவிகிதத்திலிருந்து 7 சத விகிதமாகவும் உயர்த்த காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது. சிறுபான்மையின ருக்கான 4 சதவிகித இடஒதுக்கீடும் மீட் டெடுக்கப்படும். அதேபோல லிங்கா யத், வொக்கலிகர்கள் போன்ற பிற சமூ கங்களுக்கான இடஒதுக்கீடு அதி கரிக்கப்படும். மேலும், இந்த 75 சதவிகித இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை பாதுகாக்கும் வகையில், அதனை அரசியலமைப் புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்ப்பதற்கான நடவடி க்கைகளும் மேற்கொள்ளப்படும். சட்டமன்றத்தின் முதல் அமர்வில் சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்படும்” என்று காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனினும், அந்த அறிக்கை பொதுவெளியில் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
கரூர், மே 3- சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத் தன்று வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபு சங்கர் தெரிவிக்கையில், ‘‘2023-ஆம் ஆண்டிற்கான முத லமைச்சர் மாநில இளைஞர் விருது 15.08.2023 அன்று நடை பெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. 16 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இதற்கு 1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றிருக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங் கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளி களில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மே 31 மாலை 4 மணி கடைசி நாளாகும். எனவே, கரூர் மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள நபர்கள் www.sdat.tn.gov.in விண்ணப்பித்து பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண் 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் பணியாளர்கள் காயம்
திருத்துறைப்பூண்டி, மே 3- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஓவரூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வாய்க் கால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது வாய்க்கால்களை ஆக்கிரமித்து இருந்த மரக்கிளைகளை சுத்தம் செய்யும்போது, மரக்கிளையில் இருந்த மலைத்தேனீகளின் கூடு கலைந்து அதிலிருந்த தேனீக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த வர்களை கொட்டியது. இதில் ஓவரூர் கிராமத்தைச் சேர்ந்த பூபதி (40), கஸ்தூரி. (38), சந்திரா (55), அஞ்சம்மாள் (60), வீரம்மாள் (70), உமா (40), ரேவதி (58) உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர். இவர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு திருத் துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அனுமதி இன்றி கட்டப்பட்ட பயிற்சிக் கூடத்திற்கு சீல் திருச்சி மாநகராட்சி நடவடிக்கை
திருச்சிராப்பள்ளி, மே 3- திருச்சி மாநகராட்சி 5-ஆவது மண்டலம் வார்டு எண் 11.ல் அண்ணாமலை நகர் பிரதான சாலையில் அனுமதி யற்ற கட்டடத்துடன் கூடிய விளையாட்டு பயிற்சிக் கூடம், புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி தற்பொழுது செயல் பட்டு வருகிறது. இதில் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் மைதானம் உள்ளது. இந்த நிலையில் இக்கட்டிடத்திற்கும், விளையாட்டு பயிற்சிக் கூடத்திற்கும் திருச்சி மாநகராட்சியிடம் கட்டி டத்தின் உரிமையாளர் அனுமதி பெறவில்லை. இது தொடர் பாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிட உரி மையாளருக்கு 30 நாட்களுக்கு முன்பு முறையாக நோட் டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நோட்டீசுக்கு எந்தவித பதி லும் அளிக்கவில்லை. இதனையடுத்து மாநகராட்சி உதவி யாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் ரவி ஆகியோர் கொண்ட குழு புதனன்று நேரடியாக விளையாட்டு பயிற்சிக் கூடத் திற்கு சென்று கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தது.
உறவினர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
திருச்சிராப்பள்ளி, மே 3- திருச்சி இனாம்குளத்தூர் பூலாங்குளத்துப்பட்டி ஆதி திராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவ ருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது மனைவி ஆராயி தனது கணவரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். இந்த நிலையில் மணப்பாறை மஞ்சம்பட்டி அமைய புரம் பகுதியைச் சேர்ந்த ஆராயியின் உறவுக்கார வாலி பர் சரவணன் (30) என்பவர் வந்துள்ளார். மேலும் சரவணன் அவர்களிடம் பாசமாக நடந்து கொண்டுள்ளார். கணவன் - மனைவி இருவரும் மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் அந்த நபர் வீட்டை தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார். உறவுக்காரர் தானே என ஆராயியும் அதற்கு சம்மதித்தார். இதற்கிடையே பீரோவில் வைத்திருந்த பொருட்கள் கலைந்து கிடப்பதை கண்டு பாண்டியனுக்கு சந்தே கம் ஏற்பட்டது. பின்னர் அதில் வைத்திருந்த நகைகளை தேடிப் பார்த்த போது காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டை பார்த்துக் கொள்வதாக கூறிய சரவணன் பீரோ வை திறந்து அதிலிருந்த மூன்றே முக்கால் பவுன் நகை களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து ஆராயி ராம்ஜி நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
வாலிபரை தாக்கி செயின், செல்போன் பறிப்பு
திருச்சிராப்பள்ளி, மே 3- திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மகாலட்சுமி நகர், சல்மான் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (33). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்த செல்வம் திருவானைக்கோவில் சோதனைச் சாவடி அழகிரிபுரம் டாஸ்மாக் பகுதியில் நடந்து சென்றார். அப்போது இரண்டு பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவரது முகத்தில் சரமாரியாக தாக்கி விட்டு செல்வம் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் செயின் மற்றும் ஒரு விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.