states

தீக்கதிர் நிருபரின் வாகனத்தை பறித்து வைத்து மிரட்டல்

திருப்பூர், செப். 23- தாராபுரத்தில் தீக்கதிர் நிருபர் ஆர்.ராஜாவிடம் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்து கொண்ட காவல் துறைக்கு திருப்பூர்  மாவட்டச் செய்தியாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டச் செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கார்த்திகேயன், செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகியோர் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  கடந்த ஒரு சில தினங்களுக்கு (20-9-22) முன்பாக தீக்கதிர் நாளிதழில் தாராபுரம்  வட்டாரத்தில் நடைபெற்று வரும் தொடர்  திருட்டுச் சம்பவங்கள் மற்றும் காவல்துறை யின் அலட்சியம் குறித்து ராஜா செய்தி  வெளியிட்டு இருந்தார். இந்தப் பின்னணி யில் அவரை மிரட்டும் சம்பவம் நடந்திருக்கிறது. வியாழக்கிழமை இரவு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் இருந்து  அவரது வாகனத்தை பறித்து வைத்துள்ள னர். சிறிது நேரத்தில் காவல் துணை கண்காணிப்பாளரும் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

சம்பவம் நடைபெற்ற விதத்தை பார்க்கும் பொழுது அது ராஜா வை திட்டமிட்டு மிரட்டும் நடவடிக்கை யாகவே தெரிகிறது. சமூகத்தில், அரசு மற்றும் காவல்துறை நிர்வாகத்தில் நடைபெறும் தவறுகளை, குறைபாடுகளை, பலவீனங்களை சுட்டிக்காட்டி செய்தி வெளியிடுவது பத்திரி கையாளர்களின் ஜனநாயகக் கடமை யாகும். அப்படி செய்தி வெளியிடும் பொழுது அதன் தன்மையைப் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு. அதற்கு மாறாக செய்தி வெளி யிட்டவரை வஞ்சக நோக்கத்துடன் மிரட்டு வதும், அவர்களது வாகனத்தை பறித்து வைத்துக் கொண்டு மன உளைச்சல் ஏற்படுத்துவதும், அச்சுறுத்துவதும் சரியல்ல. தாராபுரம் காவல்துறையினரின் இந்த  ஜனநாயக விரோத செயல்பாட்டை திருப்பூர்  மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் வன்மை யாகக் கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல் அதிகாரிகள் மீதும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும், அந்த துறை ரீதியான விசார ணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று திருப்பூர் மாவட்டச் செய்தி யாளர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, தமிழக அரசு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.