states

இன்றும் இவர்களே எங்கள் ஹீரோக்கள்!

சோவியத் யூனியனைப் பாதுகாக்க வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து சோவியத் யூனியன் சிதைக்கப்பட்ட 1991-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அங்கு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள  கோடிக்கணக்கான மக்கள்-ஆகப்பெரும்பாலான மக்கள் சோவியத் ஒன்றியம் தொடர வேண்டுமென்று வாக்களித்தார்கள். 27 ஆண்டுகள் கழித்து 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் வி.டி.எஸ்.ஐ.ஓ.எம். என்று சுருக்க எழுத்துக்களால் அறியப்படும் ஓர்  அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் மிக அதிக ரஷ்ய மக்களும் ‘போல்ஷ்விக் (கம்யூனிஸ்ட்) புரட்சித் தலைவர்களாகிய லெனினும்  ஸ்டாலினுமே இன்றும் எங்கள் ஹீரோக்கள்’ என்று கருத்துத் தெரி வித்தனர். சோஷலிசப் புரட்சியின் மூலமே தங்கள் நாடு சமூ கத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் அறிவியல் துறை யிலும் கலாச்சாரத் துறையிலும் மிகப் பெரும் முன்னேற்றம் கண்டது என்று பெரும்பான்மை ரஷ்யர்கள் கருத்துத் தெரிவித்தனர். சோவியத் அரசுதான் தொழிலாளர்களையும் கஷ்டப்படும் மக்களையும் காப்பாற்றியது என்று 50 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் கருத்துத் தெரிவித்தனர். 

தவறு ஏற்பட்டது கம்யூனிஸத்தில் அல்ல, அதை அமல் நடத்தியதில்தான் என்று, 2016-ஆம் ஆண்டு நடத்திய கருத்துக் கணிப்பில் முன்னாள் சோவியத் குடியரசு மக்களின் கருத்தாக இருந்தது. சோவியத் யூனியன் சிதைந்ததன் 25-ஆம்  ஆண்டில் - அதாவது 2016-ல் ரஷ்ய ஊடகங்கள் ஒரு கருத்துக்  கணிப்பு நடத்தின. அதில் பெரும்பான்மை மக்களும் சோவியத் யூனியன் இருந்ததுபோதுதான் வாழ்க்கை சிறப்பாக இருந்த  என்று கருத்துத் தெரிவித்தனர். ரேடியோ ஸ்புட்னிக்கும், ஸ்புட்னிக் செய்தி ஏஜென்ஸியும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களி டம் நடத்திய  கருத்துக் கணிப்பில் ரஷ்யாவில் 64 சதவீதம் பேர்  முன்னாள் சோவியத் யூனியன் வாழ்க்கையே சிறந்ததாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்தனர். சர்வே நடத்தப்பட்ட முன்னாள் சோவியத்தின் 11 குடியரசுகளில் 9-லும் பெரும்பான்மை மக்கள்  இதே கருத்தையே பதிவு செய்தனர். ஆர்மீனியாவிலும் அஜர்பை ஜானிலும் 69 சதவீதம் மக்களும், கஜகஸ்தானில் 61 சதவீதம் மக்க ளும் உக்ரைன், கிர்கிஸ்தானில் 60 சதவீத மக்களும் சோவியத் யூனியனுக்கு ஆதரவான கருத்தையே தெரிவித்தனர்.