states

கோடை மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது: அமைச்சர்

கோவை, மார்ச் 3-  கோடைக் காலத்தைப் பொறுத்த வரையில் மின் விநியோகத்தில் எந்த விதமான பாதிப்புகளும் இருக்காது என்று தமிழ்நாடு மின் துறை அமைச் சர் செந்தில்பாலாஜி கூறினார். கோவையில் செய்தியாளர் களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், கோடைக் காலம் தொட ங்கவுள்ளதால், மின் விநியோகம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வரக் கூடிய ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் விநியோகம், கோடைக் காலத் தில் கூடுதலாக ஏற்படுகிற தேவை களைப் பூர்த்தி செய்வதற்காக, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. 4200  மெகாவாட்டுக்கு மேல் கூடு தலாக கோடைக் காலத்தை சமாளி ப்பதற்கு மின் விநியோகம் தேவைப் பட்டிருக்கிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள் ளது”என்றார். இந்தக் கோடை காலத்தைப் பொறுத்தவரையில் மின்விநியோ கத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது. தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது என்றும் அவர் கூறினார். புதிதாக சூரிய சக்தி மின்சார நிலையம் (சோலார் பிளான்ட்) அமை க்கப்படுமா?  என்ற கேள்விக்கு பதில ளித்த அவர், “ஏற்கெனவே 6 ஆயிரம் மெகாவாட் அளவில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி பூங்கா அமைப்ப தற்கான அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளி கள் இப்போதுதான் கோரப் போகி றோம். அந்தப் பணிகள் முடிந்ததும் அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங் கும்” என்றார். மேலும், “மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை. எந்தச் சிக்கலும் இல்லை. ஏறத் தாழ 99.7 விழுக்காட்டினர் இணைத்து விட்டனர். இன்னும் 0.3 விழுக்காட்டி னர் மட்டுமே இணைக்காமல் உள்ளனர். அந்தப் பணிகளும் இன்னும் இரண்டொரு நாட்களில் முடியும்” என்று அவர் கூறினார்.