states

முதல்வர் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்!

சென்னை, ஜூன் 25 - தமிழ்நாடு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் நாகை மாலி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது ‘தமிழ்நாடு முதல்வர் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் தேவையில்லை’ என பதில் அளித்திருப்பது ஏற்புடையதல்ல என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெரிவித்துள்ளது. “சாதி ஆணவக் கொலைகள் அதி கரித்து வரும் நிலையில் தனிச் சட்டத் தின் தேவை முன்பைவிட அதிகரித்து வருகிறது” என்றும் குறிப்பிட்டுள் ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலா ளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வலிந்து திணிக்கப்படும் வர்ணாசிரம சிந்தனைகள்

“சமூகத்தில் ஏற்பட்டு வரும் கல்வி மற்றும் முதலாளித்துவ பொருளா தார வளர்ச்சிகள் அறிவியல் சிந்த னைகளை வளர்த்து வருவது இயல்பு தான். முற்போக்கு மற்றும் பகுத்த றிவு சிந்தனைகளும், செயல்பாடு களும் சமூகத்தை பண்படுத்தி வருவதும் மெய்யானது தான். ஆனால் சிந்தனை வளர்ச்சிக் கான இந்த முற்போக்கு விழுமியங் களுக்கு எல்லாம் சவால் விடுத்து சாதிய வர்ணாசிரம சிந்தனைகள் தமிழ்ச் சமூகத்தின் மீது வலிந்து திணிக்கப்படுவதும், அதன் விளை வாக சாதிய வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்படுவதும் உண்மை யாகத் தானே இருக்கிறது.

பெற்றோர் - உறவினர்களே எதிரிகளாக மாறும் அவலம்

குறிப்பாக, சாதிய வர்ணாசிரம நிறுவனங்களின் மீது சாதி மறுப்புத் திருமணங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதன் காரண மாகவே சாதி மறுப்பு இணையர்கள் கொடூரமாகக் கொல்லப்படு கின்றனர். தம்பதியினர் அல்லது அவருடைய உறவினர்களை ஊரை விட்டு வெளியேற்றுதல், தண்டம் விதித்தல், சமூகப் புறக்கணிப்பு செய்தல், பொருளாதாரத் தடை  விதித்தல், சொத்துக்கள் மீதான  உரிமையை மறுத்தல் போன்ற  கொடுங்குற்றங்களும் அரங்கேற்றப் படுகின்றன. பெற்றோர்களும், உறவினர் களுமே இங்கே குற்றம் செய்கிற எதிரிகளாக இருக்கிறார்கள். கொலைக்குற்றம் அல்லது கொடும் பாதகம் செய்த பெற்றோர்களையும், உறுவினர்களையுமே எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டிய நிலையில் சாதி மறுப்பு இணை யர்கள் இருக்கின்றனர்; அல்லது அவர்களிடமிருந்து அஞ்சியே காலமெல்லாம் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நீதிக்கானப் போராட்டம் கடுமையாக இருக்கிறது

சட்ட விரோதக் குற்றங்கள் உற வின் பெயராலும், கூட்டாகவும் நடைபெறுவதால் நீதிக்கான போராட்டம் கடுமையாகிறது. உசி லம்பட்டி விமலாதேவி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறையை இடித்துரைத்ததை இங்கே கவனப்படுத்துகிறோம். “சட்டப்படி திருமண வயதை அடைந்த விமலா தேவி - திலிப் குமார் தம்பதியினரை அழைத்து வருவ தற்கு கேரளத்திற்கு சிறப்புக் குழு வை அனுப்பியது, அதையும் நாட் குறிப்பில் பதிவு செய்யாதது, கேரளத்தில் இருந்து அழைத்து வந்த விவரத்தையும் பதிவு செய்யாதது, காவல் நிலையத்திலேயே கும்ப லாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது” என விவரிக்கப்பட்டுள்ளது.

மத்திய சட்ட ஆணையமே  பரிந்துரைத்த தனிச் சட்டம்!

இது விமலாதேவி வழக்கில் மட்டும் நடைபெற்ற குற்றம் அல்ல. ஏறக்குறைய அனைத்து சாதி ஆணவக்கொலைகளிலும் நடை பெறுகிற குற்றம். நீதி நிலைநாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வழக்கிலும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல சமூக சீர்திருத்த அமைப்புகளின் பங்களிப்புகளும், உழைப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. மேலும் ஐக்கிய முற்போக்கு  கூட்டணி ஒன்றிய ஆட்சியதி காரத்தில் இருந்த போது,  இத்தகைய ஒரு சட்டம் தேவை என்று ‘இந்திய சட்ட ஆணையமே பரிந்து ரை செய்திருக்கிறது.

ராஜஸ்தானில் எப்போதோ கொண்டுவரப்பட்டு விட்டது

ராஜஸ்தான் மாநில அரசு சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கச் தனிச் சட்டம் இயற்றியுள்ளது. ‘ராஜஸ்தான் திருமண இணையர் தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம்பரியம் பெயரால் தலையீடு தடுப்பு சட்டம் 2019 (The Rajasthan Prohibition of Interfer ence with the Freedom of Matri monial Alliances in the Name of Honour and Tradition Act 2019)’ என்ற அந்தச் சட்டம் சாதிய ரீதியான திரட்டல் மூலம் ஒரு சமூக நிர்ப்பந்தத்தை பெற்றோர் - உறவினர் மீதும், சாதி மறுப்பு திருமண தம்பதியருக்கு எதிராகவும் ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கான அம்சங்களை கொண்டதாக அமைந்திருக்கிறது.  உச்ச நீதிமன்றத்தின் சக்தி வாகினி வழக்கிலும் தரப்பட்டுள்ள வழிகாட்டல்கள் சட்ட வடிவம் பெற வேண்டும். தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னின்று நடத்திய உசிலம்பட்டி விமலாதேவி வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டல்படி அமைக்கப்பட்ட மாவட்ட சிறப்பு பிரிவுகளும் செயல்பாட்டிற்கு வர வேண்டும்

தனித்த சிறப்புச் சட்டம்  தமிழகத்திற்கு அவசியமே!

உடுமலை சங்கர் துவங்கி பல்வேறு சாதி ஆணவப் படுகொலை கள் காவல் நிலையங்களில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாததால் நடந்தவைகளே. எனவே தான், சிறப்புச் சட்டம் அவசியமாகிறது. குற்றங்கள் நடைபெறவுள்ள சூழல்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவராக கருதப்படும் நபருக்கோ, அல்லது நபர்களுக்கோ தேவையான தடை களைத் விதிக்கவும்; தடையை மீறினால் அவர்கள் மீது சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கும் வகை செய்யப்பட வேண்டும். தம்பதியரைப் பிரிக்க காவல்துறை முயலக் கூடாது சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதி யினர் வாய்மொழியாகவோ எழுத்து  மூலமாகவோ காவல் நிலையத்திலோ அல்லது அரசு அதிகாரியிடமோ ஒரு உறுதிமொழியை தெரிவித்த பின்பு அவர்களை பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடு படக்கூடாது. மீறினால் சம்பந்தப் பட்ட காவலர்கள் மீது அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிப்ப தற்கு வகை செய்யப்படவேண்டும். குற்றவாளிகளில் கொலை செய்தவர்களை இ.பி.கோ 302-இன்  படி  தண்டிக்கப்படுவது போல், கொலை மற்றும் குற்றங்களை திட்ட மிடுகிற போது உடன் இருப்பவர் களும் கொலைக் குற்றவாளி யாகவே கருதப்பட வேண்டும்.

ஆணவக் கொலையை ஆதரிப்போரும் தண்டிக்கப்பட வேண்டும்

கொலைக்குப் பிறகு அல்லது வன்முறைகளுக்கு பிறகு, அதனைப் புகழ்கிற அல்லது பொதுவெளியில் பகிரங்கமாக ஆதரிக்கிற நட வடிக்கைகளும் குற்றமாகக் கரு தப்பட வேண்டும். இத்தகைய தன்மைகளோடு சிறப்பு பிரிவுகள் அமையவேண்டும். எனவே சாதிய ஆணவப் படு கொலைகளை தடுத்து நிறுத்திட, தமிழக அரசு உடனடியாக சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய சிறப்புச் சட்ட த்தை நிறைவேற்றிட வேண்டும்.  தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாரம் பரியம் மேலும் மெருகூட்டப்பட வேண்டும். இவ்வாறு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி அறிக்கையில் வலி யுறுத்தப்பட்டு உள்ளது.